28ல் துபாயில் வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது: மிஸ் பண்ணிடாதீங்க
துபாய்: துபாயில் முத்தமிழ்ச் சங்கம் நடத்தும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
துபாய் முத்தமிழ்ச் சங்கம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கவிப்பேரசு வைரமுத்து, சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மற்றும் யு.கே. முரளி, இசைக்குழுவினருடன் பிரபலப் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ், சூப்பர் சிங்கர் அல்கா அஜித், பாடகி ஷப்னம், பாடகர் வெங்கட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இசை நிகழ்ச்சியுடன் துபாய் ஃபீட் அன்ட் பீட்(Feet & Beat) நடனக் குழு வழங்கும் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கருத்து, கவிதை, நகைச்சுவை மற்றும் நடனம் கலந்த இந்த மாபெரும் பல்சுவை நிகழ்ச்சி வரும் 28ம் தேதி மாலை 6.30 மணிக்கு துபாய் அல் நாசர் லெஷர்லேண்ட் ஐஸ் ரிங்கில் நடைபெற இருப்பதாக முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே. மோகன் தெரிவித்தார். அழைப்பிதழ் பெற முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய 00971 55 3284666, 00971 50 1245340 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications