தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில், மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில் மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Recommended Video

மிஸ்ஸோரி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைக் கண்டித்து அமெரிக்காவின் மிஸ்ஸோரி நகர தமிழ்ச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து அரசுக்கு கண்டனம் எழுந்து வரும் நிலையில், உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டங்கள்
இங்கிலாந்து, சவூதி அரேபியா, துபாய், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் முதலாளிகளுக்காக, ஒரு மாநில அரசு தன் மக்களையே சுட்டுக்கொன்ற சம்பவம் உலக அரங்கில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் போராட்டம்
இந்நிலையில், அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாநிலம் செயின்ட் லூயிஸ் நகரில் 26 மே அன்று தமிழ் சங்கம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மிகுந்த வேதனை அளிக்கிறது
இதில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஆன் வாக்னர் கலந்துகொண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசியது தமிழர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உரையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் பெண்கள், பதின் பருவ குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடுங்கொலைகள் மற்றும் வன்முறைகள் மன்னிக்க முடியாதவை என்றும் கூறினார்.
உடனடியாக நடவடிக்கை
இப்போராட்டத்தில் ஏராளமான அமெரிக்க தமிழர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனங்களை தெரிவித்தனர். அதோடு மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவங்கள் மற்றும் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற விவாதங்கள் நடைபெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications