சிங்கப்பூரின் உயரிய கலாசார விருதுக்கு தமிழ்க் கவிஞர் கே.டி.எம்.இக்பால் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் தமிழ்க் கவிஞரும், எழுத்தாளருமான கே.டி.எம். இக்பால், சிங்கப்பூரின் உயரிய "கலாசாரப் பதக்கம்' பெற தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.
தற்போது 74 வயதாகும் இக்பால், இதுவரை சிங்கப்பூர் வானொலிக்காக 200-க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். 7 கவிதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்,
எனவே, கவிஞர் இக்பாலைக் கவுரவிக்கும் வகையில் கலாசாரப் பதக்கம் தர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரின் உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து இக்பால் கூறுகையில், ‘கவிதைதான் என் முதல் காதலி. நாங்கள் இருவரும் 60 வருடங்களாக இணைபிரியாமல் இருந்து வருகிறோம். அந்தக் கவிதையே ஒரு நாள் எனக்கு கலாசாரப் பதக்கத்தைப் பெற்றுத் தரும் என கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications