துபாயில் நடந்த டிடிஎஸ் இவெண்ட்ஸின் முப்பெரும் விழா: தமிழிசை, சுகி சிவம் பங்கேற்பு
துபாய்: டிடிஎஸ் இவெண்ட்ஸ் நடத்திய முப்பெரும் விழா 14.11.2014 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் சிறப்புற நடைபெற்றது.
டிடிஎஸ் இவெண்ட்ஸ் நிர்வாகி ஜெயந்தி மாலா சுரேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். நிறுவனப் புரவலர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

துவக்கமாக குத்துவிளக்கினை ஜெயந்தி மாலா சுரேஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், திருமதி. குமார் உள்ளிட்டோர் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்டவை பாடப்பட்டது.
திருக்குறளை செல்வி பத்மஸ்ரீ விஜயராகவனும், இன்று ஒரு தகவலை கோபிகா கீதா கிருஷ்ணனும் வாசித்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தனது உரையில், தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்திய டிடிஎஸ் இவெண்ட்ஸுக்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் எவ்வித இன, சாதி, மொழி பாகுபாடு இன்றி பணியாற்றி வரும் இந்திய மக்களைப் பாராட்டினார்.
சுகி சிவம் நடுவராக இருக்க வாழ்க்கை என்றும் நமக்கு பூந்தோட்டமா? போராட்டமா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. சுகி சிவம் குழுவில் சண்முகவடிவேல், பேராசிரியர் டாக்டர் பிரேமா, மோகன சுந்தரம், மது, வழக்கறிஞர் சுமதி, மணிகண்டன் உள்ளிட்டோர் இடம்பெற்று ரசிகர்களை தங்களது நகைச்சுவையின் மூலம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்.

நடன ஆசிரியை கவிதா பிரசன்னா வடிவமைப்பில் நடன நிகழ்ச்சியும், பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன் வடிவமைப்பில் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்புக் குழந்தை கார்த்திக் தனது பாடலின் மூலம் பாராட்டு பெற்றார்.
ஜெயந்தி மாலா சுரேஷ் தனது ஆய்விற்காக முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவூது, அரப் லைட் ரவி கண்ணன், சமூக சேவையாளர் கே. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரப் லைட், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப் அல் கலீஜ், பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, அலையன்ஸ் குரூப், சூப்பர் டெக்ஸ், ஏஎஸ்பி சௌந்தர்யம் ஜென்ரல் டிரேடிங், அல் அஸ்மா டெக்னாலஜி, டிரான்ஸ்கான், வாஸ்டாக், சிவ் ஸ்டார் பவன், அல் வஹா குரூப், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், பெருமாள் பூக்கடை, வெஸ்டர்ன் ஆட்டோ, பேங்க் ஆஃப் பரோடா, லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டல், ஈராஸ் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுரனை வழங்கின.
இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, பிரசன்னா, கீதாகிருஷ்ணன், சுந்தர், விஜயராகவன், விஜயேந்திரன், பாலா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
அல் அஸ்மா டெக்னாலஜி நிறுவனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவருக்கு சிறப்பு குலுக்கல் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை பரிசாக வழங்கியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications