உடைந்து போன கண்ணாடி- காயத்ரி இளங்கோ
Subscribe to Oneindia Tamil
திரிந்தோம் நண்பர்களாய்
பிரிந்தோம் எதிரிகளாய்
தவறை எடுத்துக் கூறியது தவறா?
உன் நலம் நினைத்துச் சொன்னேன்
அதை குற்றம் என்று சொன்னாய்
உடைந்து போனேன்
செய்யாத தவறுக்கு
நான் கேட்ட மன்னிப்புகள்
உதறப்பட்ட போது
சுக்குநூறாய் ஆனேன்
மனதில் ஊசி குத்திய வலி
கூடவே கண்ணீர்
இப்போதும் பார்க்கிறோம்
ஒரு புன்னகைக்குக் கூட உன் உதடு மறுக்கிறது
நாட்கள் கடந்ததில்
காயம் மறைந்தது
ஆனால், வலிகள் மட்டும் எப்போதும் என்னுடன்
மறப்போம் மன்னிப்போம்..
எல்லாவற்றையும் மறக்கிறேன்
உன்னையும் சேர்த்தே!












Click it and Unblock the Notifications