நாளைய பாரதி

Subscribe to Oneindia Tamil

கால் கொப்பளிக்கும் காலத்திலே
கருவேலங்காட்டுக்குள்ளே- கத்தியோடு
கட்டை வெட்டும் கன்னிப் பெண்ணே - உன்
கெளரவம் எங்கு போச்சு கன்னிப் பொண்ணே...!

சூளை வேலைக்கு சென்றாயடி
சூரன் கண்ணில் பட்டாயடி
களையெடுக்கச் சென்றாயடி
கள்வன் கண்ணில் பட்டாயஐ

பழுத்தவர்கள் சொல்லியும் கேளாமல்
பருவ மயக்கத்தில் சென்றாயடி
பகல் வேலை பாத்திரம் கழுவுறா
பாவி உன்னைப் பெத்தவ

அப்பனும் பூமியில் இல்ல
அதுவும் உனக்குப் புரியலடி
சேலைக்கு மாறி நாலாச்சே
ஜென்மமே சீக்கிரம் புரிஞ்சுக்கோடி

காளையர் அலையும் தெருவினிலே
கண்ணியமாய் நடக்க பழகிக்கோடி
காமந்தகாரர்கள் பூமியிலே- ஏமாற
வழி வகுக்காதடி

அப்படி சொல்லியும் ஒரு புள்ளியிடம்
அடைக்கலம் புகுந்தாய் கொள்ளையிலே- அந்த
அரக்கண் பண்ண சேட்டையிலே
அடி வயிற்றில் ஒரு மூட்டையடி

பெத்தவ உயிர் ஊசலாட
மத்த சுகம் கண்டாயடி
பெத்தவளையும் சாகடிச்சிட்டா
பாவி உன் கட்டை வேகாதடி

அரக்கனிடம் ஒதுங்கும்போது அறிவிருந்தா
அரும்பு வளரா வழிவருத்திருக்கலாம்
வயிற்றில் அழிக்க நினைத்தால்
வாய்க்கு சோறு கிடைக்காதடி

வயிற்றில் பாவமறியா சிசுவடி
அதை பத்திரமாய் இறக்கி வையடி
பாவி உன்போல் மாற்றாதடி- நாளை
அவனே பாரதியாவானடி...!

- பாக்கியராஜ்([email protected])

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+