நான் நல்லவன்
பகலில் நான் பார்க்கும் பெண்களெல்லாம்
இரவில் என் படுக்கையறையின் பக்க ஏடுகள்
பள்ளியில் பார்த்த பெண்களில் அழகானவளுடன்
பள்ளி கொள்ள அங்கம் பருகுவேன்.
என்னிடம் இருக்கும் நண்பனெல்லாம் -- என்
சுயநலத்திற்க்காண போர்வைகள்
பணத்தேவையின்போது பாசம் காட்டுவேன்
குணத்தேவையின்போது குரங்காவேன்.
காதலி, என் பொய் முடிச்சின் அவிழ்ப்பு
நினைக்கும்போது நீலிகண்ணீர் வடிப்பேன்
உன்னை மட்டுமே காதலிக்கிறேன் -- நான்
காதலிக்கும் முதல் (றாவது) பெண் நீ
அன்னை எனது தஞ்சாவூர் பொம்மை
மகன் சொல் மிக்க மந்திரமில்லை
ஏப்ரல் மேயிலும் எக்ஸாம் - கறப்பேன்
கணக்கிலடங்கா கரன்சி
ஆசிரியர்க்கு நான் நாய் வால்
அவரின் உதடு ஒட்டா குறள் என் மனதில் ஒட்டா
இருப்பினும் வாத்தியார் போய் டீச்சர்
வரவேண்டும் என ஏங்கும் என் மனம்
என் வீட்டு தொலைபேசி
சிங்கத்திடம் மாட்டிய எலி
பேசும் பொய்யை பிசகாமல் கொண்டு சேர்க்கும்
உண்மையில்லா வார்த்தைக்கு உருகொடுக்கும்.
கடவுள் என் சவாலே சமாளி -- என்
அடை வெள்ளத்தின் தடை பள்ளம் அவன்
எனக்கே நாலைந்து வீடுதான் தெரியும்
அப்பன் முருகனுக்கோ ஆறுபடைவீடு
இந்த உலகம் என் நாடக மேடை
அதில் நான் மட்டுமே வில்லன்
ஆனால் பாவம் - நம்பிக் கொண்டு
இருக்கிறார்கள் நான் நல்லவன் என்று.
- பாக்கியராஜ்([email protected])












Click it and Unblock the Notifications