நீயில்லா நிமிடங்கள்
முகம் மறந்த
முகவரி தொலைத்த
நாலாவது பரிமாணத்தில்
நாம் வாழ்ந்திருக்கிறோம்
இருப்பு என்பதுகூட
இங்கு நிச்சயமற்றது...
இருந்தாலும்
வெள்ளிதோறும் நாம் பார்க்கும்
கொல்லங்காளி அம்மனும்
விடியலில் தோன்றும் கனவில்
வெண்புகையாய் தெரியும்
உன் முகமும்
என்னிடம் இன்னும்
நீ இருப்பதை
நிச்சயப்படுத்துகிறது
உன் அதிகாலை பிரார்த்தனையில்
என் நலம் நாடும்
உன் நடுங்கும்
குரலோடு சேர்த்து.....
முடியாத கவிதையில்
முற்றுபுள்ளி விழுந்தது
முறித்துகொண்ட காதலோடு
இதயம் சொல்லும்
வார்த்தை வரைய
எந்தமொழியும் இங்கில்லை!
- பாஷா([email protected])

இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications