வசந்தம் வருமா?
Subscribe to Oneindia Tamil
வசந்தத்தின் முதற்குரல்
குயிலோசை;
இன்னும் கேட்கவில்லை.
போன வசந்தத்தைப் போலவே
இம்முறையும்
அவை
வரவில்லை.
எழுப்பிய குரலுக்கு
எதிர்க்குரலின்றி,
பிசிறடிக்கிறது
குரல்வளை.
ஏனோ
மெளன அஞ்சலிபோல்
சிறு சலசலப்புமின்றி
தூங்கிக் கொண்டிருக்கிறது
வனம்.
சருகுகள்
மிதிபடும் ஓசையில்
விழித்துக்கொள்கின்றன
மரங்கள்.
இற்றைப்போல்
ஒரு வசந்தத்தில்
குயில்களின்
குரல்வளை நெரித்தவர்கள்
வந்தார்கள்.
வண்ணக் கற்றைகளை
வாரியிறைத்தனர்.
மரங்களின் உச்சியில்
மின்விளக்கேற்றினர்.
காடே அதிரும்படி
முழங்கினார்கள்.
இனியெம் வாழ்வில்
வசந்தம் தானென்று;
அவர்களின்
ஒவ்வொரு செயலிலும்
காட்டை மகிழ்விக்கும்
முயற்சி தெரிந்தது.
குயில்கள் இல்லாவிடினும்
வசந்தம் வருமென்று
காட்டின் மரங்களை
நம்பவைக்க முயன்றனர்.
ஆரவாரப் பேய்கள்
அடங்கிய பின்னும்
அமைதியாக...
தூங்கிக் கொண்டிருந்தது
காடு.
குயிலோசையை
எதிர்பார்த்து!












Click it and Unblock the Notifications