For Daily Alerts
Just In
எது கவிதை?:
கவிதையெனத்- தமிழ்க்
கவிதையென- வெறும்
சோகைச் சொற்களைச் சேர்ப்பதில்லை
ஓசையென - நல்
ஓசையென- வீண்
எதுகை மோனையில் வீழ்வதில்லை
கவிதையெனில்- அது
கவிதையெனில் - புது
கருத்தைத் தாங்கி வரவேண்டும்
கவிதையெனில் - வெல்லக்
கவிதையெனில்- வெல்லும்
சிந்தனை அழகைத் தரவேண்டும்
எழுதுகிறேன்- கவி
எழுதுகிறேன்- என
இருப்பதை வாந்தி எடுக்காதீர்
முடிவெடுத்தால்- எழுத
முடிவெடுத்தால்- இருக்கும்
இருப்பைக் காட்ட மறவாதீர்
தாக்குவது - தினம்
தாக்குவது- எனும்
கொக்கரிப்பே கவி ஆகாது
ஆக்குவது- கவி
ஆக்குவது- அது
வேள்வியெனில் புவி மறவாது
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]