For Daily Alerts
Just In
பெருமூச்சு
வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?
பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழைடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?
படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?
கடல் கடந்து நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?
மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?
- காசி ஆனந்தன்
Comments
chennai astrology literature poems essay poet eelam tamilnadu kural art gallery florals kaasi anandhan kasi anandan pavalar
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]