For Daily Alerts
Just In
புதுமனை புகுவிழா- ஆ.மணவழகன்
காட்டின் பத்திரம் விற்று- ஏர்
மாட்டைக் கலப்பையோடு விற்று
அக்கா வளர்த்த ஐந்தாறு ஆட்டையும்
அடிவிலைக்கு அம்போவென்று கொடுத்து,
அடுத்த பருவத்திற்கு அடித்து வைத்த
விதை நெல்லையும்- அம்மாவின்
ஒற்றைக் கொடியையும் கொடுத்து,
வீடு கட்டினார் அப்பா!!
..
குடிபுகும் முன் ஓலை வந்தது...
இம் முறையும்
தவணை தவறினால்- வீடு
தாழிப்படும் என்று!!
- ஆ.மணவழகன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]