For Daily Alerts
Just In
மரபு மீறிய மனங்கள்
துறவியர் இழிந்த
தவறினை செய்யத்
துணிந்திடல் முறையா?
இல்லறப் பற்றை
இழந்திடும் மரபினை
இடித்திடல் தகுமா?
சொல்ல நா கூசும்
துர்நாற்றச் செயல்களை
புரிந்தது நெறியா?
அல்லும் பகலும் - வாய்
அலுக்கப் பேசி
அங்கலாய்க்கின்றோம்!!
எந்த விலங்கும் - தன்
இனத்தில் ஒன்றை
வணங்குவதுண்டா?
இந்தத்
தலைமுறை மரபினைத்
தரைமட்டமாக்கி..
சக மனிதனை
சாமியென்றுப் போற்றியதால்..!
மரபு மீறியது சாமியார்களல்ல..!
மனங்களுள்ள
மனிதர்கள் நாம்தான்..!!
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]