For Daily Alerts
Just In
சில மழைக்கவிதைகள்
முரண்
கொட்டும் மழையைப் பற்றி
நீ
கவி படிக்க
கைத்தட்டுவார் பலர்.
அவர்களுக்குத் தெரியாது
உலராத உள்ளாடைகளுக்காக
என் மேல்
நீ காட்டும்
கோப முகங்கள்
வெறுக்கிறேன்..
மழையின் முடிவை
அறிவிக்கும் வானவில்லை
வெறுக்கிறேன்
அவளது பிரிவை
தருவிக்கும்
விடுமுறையைப் போலவே
வாழ்க்கை முறை
கடை விரிக்க
இயலா நிலையிலும்
முகங்களில் நீர் வழிய
சிரித்திருக்கிறான்
நடைபாதை வியாபாரி.
ஏற்றப்பட்ட காரின் கதவுகளுக்குள்ளே
போக்குவரத்து நெரிசலை
சபித்து
மழையை ரசிக்க மறுக்கிறேன் நான்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]