அடங்காத கண்ணீர்!
சென்ற திசையெல்லாம்
கொத்தெலும்பையும்,
கோவணத்தையும் தவிர வேறென்ன
நான் பார்த்தேன்;
கலப்பையையும்,
கஞ்சிக்கலயத்தையும்
தூக்கிக்கொண்டு,
தேடிக்கொண்டிருக்கிறான் - அங்கே
வாழ்க்கையை;
கைக்குட்டையையும்,
கண்மையுடனும் வந்து
கருத்துக்கூறிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்
மனித உரிமையைப்பற்றி!
அவமானங்கள் ஆயிரமாயிரம்,
அசிங்கத்தின் சின்னங்கள் - அங்கே
சிம்மாசனத்தில்,
அவதானித்து செல்கிறேன் - நான்
அஹிம்சைவாதி!
வாயடைத்துதான் நிற்கவேண்டும்,
வாய்ப்பு கிடைக்கும் வரை;
வயதாகிக்கொண்டிருக்கிறது என்
கனவுகளுக்கு,
கற்சிலை அமைக்க துடிக்கிறேன்,
கல்லறை வடிவில் அல்ல!
காரியம் நிச்சயம் கைகூடும் - நான்
சாமியாரைக் கேட்கவில்லை!
![]() ஆயிரம் சாமியார்கள் உண்டு - நாட்டில் அமைதி எங்கும் இல்லை! ஆயிரம் கோயில்கள் உண்டு - நாட்டில் சாமிக்குப் பஞ்சமில்லை; எரிகிறது, மனிதனை மனிதனே கொல்கிறானாம்?! வருத்தத்துடன், - இரா.தமிழரசன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications