For Daily Alerts
Just In
சொல்லி விடு- எஸ்.தியாகராஜன்
பிறப்புதொட்டு இல்லா ஓர் மாற்றம்,
என்னுள்ளே! எனக்குள்ளே!!!!
யாரோ உனையழைக்க, நான்
திரும்பிப் பார்க்கிறேன்.
ஏனோ உன் பெயர் சேர்த்து
எனை அழைக்க விழைகிறேன்.
உன் மின்னஞ்சல் வந்தால்
மின்சாரத் தாக்கம்
வாராது போனால்
கவலைகள் தேக்கம்.
பிறப்புதொட்டு இல்லா ஓர் மாற்றம்,
என்னுள்ளே! எனக்குள்ளே!!
கனவில் அழகாய் தெரிய
நடுநிசியில் முகச்சவரம் செய்கிறேன்.
கனவில் நீ கோதிய தலைமுடியை
பகல் முழுதும் தடவுகிறேன்.
ஏனடி பெண்ணே! எதற்க்காய் இப்படி!
இதுவரை இருந்ததில்லை, இப்படி நான்.
காதலென்கிறது இதயம்,
நட்பின் புதிய பரிணாமமென்கிறது அறிவு
காதலா? நட்பின் பரிணாமமா?
எதுவென்றாலும் எனக்கு சம்மதமே!
உனக்குள்ளும் இவையெல்லாம்
நிகழ்கிறதா?
சொல்லடி பெண்ணே!
இருந்தால்,
உன்னில் நான் இருந்தால்
சொல்லிவிடு!
என்னையும் கொஞ்சம் வாழ விடு.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]