For Daily Alerts
Just In
இதயம் இல்லாமல் உயிரா?- திரு
இதய அறைகளின்
இடம் முழுவதும்
நீ தான்!
அறிவாயா?
மூச்சின்
இறுதிவரையும்
நீதான்!
புரிவாயா?
உடலை
பிரியலாம்!
உயிரைப் பிரியுமா
காதல்!
காதலே உயிர்!
இதயம்
இல்லாமல்
உயிரா?
சமுத்திரம்
வற்றுமா
சூரிய
கதிரில்?
நம் காதலா
வற்றும்
என்னில்?
நான் புதைந்தாலும்
காதல் ஈரமாய்
சுரக்கும்
புதைந்த மண்ணில்!
எல்லாமுறையும்
நீதான்
எனக்கு...
புதைந்தே போனாலும்
நீர் நரம்புகளாய்
தொடுவேன்
தூரத்தில்
இருந்தாலும்!
இதயம்
இல்லாமல்
உயிரா?
நீ இல்லாமல்
நானா?
இனி
நாம் தான் வேண்டும்
நமக்கு!
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]