மயான வைராக்கியம்
Subscribe to Oneindia Tamil
துட்டனைக் கண்டால்
தூரவிலகென்ற முதுகட்டளை
தட்டாத குழந்தைதான்
கில்லியிலும் கோலியிலும் குட்டு
அரிசிமணியோடு மயிலிறகை
ஆட்டையைப் போடுவான்
தெரியாமல் குறிப்பேடு
பக்கம் கிழித்திடுவான்
முருகேசன் துட்டன்தான்
தூரப் போனாலும்
அரும்பும் கண்ணீரில்
ஆனந்தம் காண்பான்
என் வெறுப்பிற்கு விருப்பமாய்
என்றும் அவன்
இவன் இன்றே இறக்கமாட்டானா?
குழந்தை சாபத்தை
இறைவன் நிறைவேற்றினான்
ஊருணி நீச்சலில் உயிர்பலி
தினத்தந்தி சொன்னது
காலக் கப்பல் கடந்தது
குற்ற உணர்வின்றி
ஓய்வு பெற்றவுடன் மடிந்தான்
உயிர் நண்பனொருவன்
மயானத்தில் மனமொடிந்தேன்
வெக்கையில் நரம்பு
வெடித்து கிளம்பிய அவனுடல்
வெட்டியானடியில் அடங்கியது
புதைந்த பாலகன் முருகேசன்
புழுவாய் அரித்தது நினைவு












Click it and Unblock the Notifications