For Daily Alerts
Just In
உன்வசமும் மின்மினிகள்!
மானுடமே இனியேனும் மாற்றம் கண்டு மறுமலர்ச்சி யுகந்தன்னில் வாழ்ந்து காட்டு! ஊனுடலை வளர்த்திங்கே உயிரும் வாழ்ந்தாய்; உதவாத செயலனைத்தும் ஒருங்கே செய்தாய்! பேணுகின்ற நற்பழக்கம் யாவும் தள்ளி பித்தனென பேதையென வாழ்வமைத்தாய்! நாணுகின்ற செயல்களெல்லாம் நன்றே செய்து நடைபிணமாப் பூமிக்கும் பாரமானாய்! குடியழிக்கும் பழங்கங்கள் கூடி நிற்கும் குறையுடயை பிறவியென வாழ்வமைத்து; அடிதடிக்கும் கொலைகளுக்கும் ஆளாய் போனாய் அவனியிலேயே நீயுமொறு மிருகமாகி! படியளக்கும் இறைவனுக்கும் பாவம் செய்தாய் பக்தனென வேடமிட்ட நடிப்பின் மூலம்! விடியலுமே உன்வாழ்வில் வந்ததுண்டா? விழித்திடுவாய் இனியேனும் விடியல் காண! மதம்பார்த்தாய்; இனம்பார்த்தாய்; எல்லாம் பார்த்தாய் மற்றவரை மனிதரெனப் பார்த்ததுண்டா? பதம்பார்க்கும் ஆயுதத்தைக் கையில் கொண்டால் பாசமெங்கே உன்னிடத்தில் உறவா கொள்ளும்! இதம்பார்த்துப் பேசுகின்ற இயல்பு விட்டால் இதயத்தில் ஈரமெங்கே இடம்பிடிக்கும்? மிதமிஞ்சிப் போகவில்லை இன்னும்;- உன்னில் மின்னுகின்ற மின்மினிகள் மிச்சம் உண்டே! - ரா.விமலன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]