பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Subscribe to Oneindia Tamil
கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005
அருகிலிருந்து ரகசியம் பேசும் தொனியில் கதை, கவிதை, கட்டுரைகள் வழியாக தமிழ்ச் சமூகத்தோடு இடையறாது வாஞ்சை மிகுந்தஉரையாடலை நிகழ்த்தி வருபவர் பாவண்ணன்.
நேரடிப் படைப்புகள் மட்டுமல்லாது கன்னடத்திலிருந்து தமிழ் வாசகனின் மனச் செழுமையை வளர்க்கும் விதமான படைப்புகளைமொழியாக்கம் செய்து தாய்மொழிக்கு அக்கறை மிகுந்த பங்களிப்பை செய்து வருகிறார்.
மகாபாரதப் போரை நவீன வாசிப்புக்கு உட்படுத்தும் எஸ்.எல். பைரப்பாவின் கன்னட நாவல் பர்வா. இதை 1,400 பக்கங்களில் பருவம்என்ற நாவலாக தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருதுபாவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த ஆளுமையான பாவண்ணனுக்கு இந்த விருது அளிக்கப்பட்ட மகிழ்வை வாசகர்களோடு புதுவிசை பகிர்ந்து கொள்கிறது.












Click it and Unblock the Notifications