சோலி முடிஞ்சு.. ஆப்பு வைக்குது ஏஐ! காலியாகப் போகும் ஐடி வேலைகள்! இதை செய்தால் மட்டும் தப்பிக்கலாம்!
சென்னை: உலக அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ-யின் அதிகரித்து வரும் நிலையில் ஐடி துறையில் பணிநீக்கம் என்பது சர்வ சாதரணமாகிவிட்டது. கூகுள், மெட்டா, டிசிஎஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. கிளவுட், ஏஇ, சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே ஏஐ உலகில் போட்டியை சமாளிக்க உதவும் எனவும் இல்லையென்றால், வேலை இழப்பை தவிர்க்க முடியாது என்கின்ற தொழில்நுட்ப நிபுணர்கள்.
இந்தியாவின் முக்கியமான வேலை வாய்ப்பு துறைகளில் ஒன்று தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை. உலகளவில் மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் தற்போது இந்த துறையில் வேலையிழப்பு அச்சம் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள், தெரிவிக்கின்றன. ஏஐ வருகைக்குப் பிறகு ஐடி துறையில் புரட்சி ஏற்பட்டாலும் அதற்கேற்றார் போல் தங்களை அப்டேட் செய்து கொள்ளாதோர் தொழில்நுட்ப நிறுவனங்களால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஏஐ தாக்கம்
மேலும், உலக அளவில் பிரபலமான மைக்ரோசாப்ட், கூகுள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை எட்டும் என்கின்றனர். முதலாவது காரணம், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு. முன்னர் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் செய்து வந்த வேலைகளை, இப்போது ஆட்டோமேஷன் சாப்ட்வேர் சில நிமிடங்களில் செய்து முடித்து விடுகிறது.
ஐடி வேலை
இதனால் அடிப்படை குறியீடு எழுதுதல், பராமரிப்பு போன்ற பணிகளில் மனித வள தேவை குறைந்துள்ளது. இரண்டாவது காரணம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதால் அங்குள்ள நிறுவனங்கள் செலவுகளை குறைக்க முனைகின்றன. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வரும் புது ஒப்பந்தங்கள் குறைந்து விட்டன.
வேலை இழப்பு
மூன்றாவது காரணம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மாற்றம். முன்னர் "சாப்ட்வேர் டெவலப்மென்ட்" என்ற அடிப்படை சேவைகள் அதிகம் தேவைப்பட்டாலும், இப்போது சைபர் பாதுகாப்பு, கிளவுட், டேட்டா அனலிடிக்ஸ் போன்ற மேம்பட்ட சேவைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதற்கான திறன்கள் இல்லாத ஊழியர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது.
பாதிப்பு எப்படி இருக்கும்?
இந்த வேலையிழப்பு அபாயம் குறிப்பாக இளம் ஊழியர்கள் மற்றும் மத்திய நிலை ஊழியர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். அனுபவம் குறைவானவர்கள் எளிதில் மாற்று வேலை கிடைக்காமல் சிக்கிக் கொள்ளலாம். மத்திய நிலை ஊழியர்கள் சம்பளம் அதிகமாக இருப்பதால் முதலுதவி நடவடிக்கையாக அவர்களையே நிறுவனங்கள் குறிக்கக் கூடும். மேலும், இந்தியாவின் சென்னையிலும் பெங்களூருவிலும் இருக்கும் முக்கிய ஐடி மையங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே சில முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிழக்கச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
வழி என்ன?
இது முற்றிலும் எதிர்மறையான நிலை அல்ல. அதே சமயம், மாற்றங்களை ஏற்கும் திறன் அவசியம் ஊழியர்களுக்கு இருக்க வேண்டும். புதிதாக ஐடி துறையில் கால் பதிப்பவர்களும், ஏற்கனவே இருப்பவர்களும், ஏஐ, கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய கால "ஸ்கில் அப்கிரேட்" படிப்புகள் ஐடி ஊழியர்களுக்கு பெரிதும் உதவும். புதிய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து கற்றல் (Continuous Learning) மேம்படுத்திக் கொள்வதே பாதுகாப்பான வழி என்கின்றனர் ஐடி வல்லுநர்கள்.
இந்தியா ஐடி
ஐடி துறையில் வேலையிழப்பின் அபாயம் உண்மை தான். ஆனால் அதே சமயம் புதிய வாய்ப்புகளும் உருவாகிக் கொண்டே உள்ளன. உலகளவில் இந்திய ஐடி திறன்களுக்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. இந்தியாவில் உள்ள ஐடி திறன்கள் உலகளவில் தேவைப்படும் நிலையில், தகுந்த நேரத்தில் திறன் மேம்பாடு செய்தால் வேலையிழப்பை தவிர்க்கவும், புதிய வாய்ப்புகளைப் பெறவும் முடியும் என்பதையும் ஐடி துறையில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
-
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications