Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1.3 லட்சம் கோடி.. ஆந்திராவில் பிரம்மாண்ட AI மையத்தை அமைக்கும் கூகுள்.. இனி எல்லாமே மாறப்போகுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏஐ துறையில் இப்போது பல்வேறு முதலீடுகள் குவிந்து வருகிறது. ஏஐ உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்

ஏஐ இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ துறையில் மிகப் பெரிய முதலீடுகளும் குவிந்து வருகிறது. இதற்கிடையே கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்த ஏஐ ஹப் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Google AI

பிரம்மாண்ட ஏஐ மையம்

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளர்ச்சி என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சுந்தர் பிச்சை இன்று பேசியுள்ளார். இந்தத் திட்டம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.. 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிகப் பெரிய இந்திய முதலீடாக அமைகிறது. இந்த ஏஐ மையம், விசாகப்பட்டினத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் பிச்சை

இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், "கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசினேன். ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

கடலுக்கு அடியில் கேபிள்

இதன் மூலம் விசாகப்பட்டினம் ஏஐ வளர்ச்சி மையமாக மட்டுமின்றி, ஒரு முக்கிய இணைப்பு வாயிலாகவும் செயல்படும். அதாவது நம்மில் பலரும் நினைப்பது போலப் பெரும்பாலும் இணையம் என்பது சாட்டிலைட் மூலம் கிடைப்பதில்லை.. அவை கடலுக்கு அடியில் இருக்கும் கேபிள்கள் மூலமாகவே கிடைக்கின்றன. உலகின் பல பெரு நிறுவனங்கள் இதற்காக கேபிள்களை கடலுக்கு அடியில் போட்டுள்ளன.

கூகுளும் அதுபோல கடலுக்கு அடியில் பல கேபிள்களை போட்டுள்ள நிலையில், அதற்கான உள்கட்டமைப்பையும் விசாகப்பட்டினத்தில் நிறுவி உள்ளது. அதாவது கடலுக்கு அடியில் இருக்கும் கூகுள் கேபிள்கள் இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் இணையும். இதன் மூலம் சர்வதேச நெட்வொர்க் உடன் விசாகப்பட்டினம் நேரடியாக இணைக்கப்படுகிறது.

கூகுள் சொல்வது என்ன!

இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த இணைப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இப்போது மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் கடலுக்கடி கேபிள் இணைப்பு இருக்கும் சூழலில், அதற்கு ஒரு மாற்று வழியை இது நமக்குக் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

டெல்லியில் கூகுள் நடத்திய 'பாரத் ஏஐ சக்தி' என்ற நிகழ்வில் இந்த ஏஐ ஹப் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகின் 12 நாடுகளில் கூகுளின் சர்வதேச AI மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மற்றும் கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடு

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இந்தத் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். இந்தியாவின் முதல் ஜிகாவாட் டேட்டா மையமும், கூகுளின் முதல் AI மையமும் எங்கள் மாநிலத்தில் அமைவதில் பெருமை கொள்கிறோம். இது புதுமை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான நீண்ட கால சப்போர்ட்டை கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+