Kadagam rasi palan: கடக ராசிக்கு சர்வ யோகத்தை அள்ளிக் கொடுக்கும் குரு.. அதிர்ஷ்டம் கொட்டும்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்குள்ளேயே குரு வருகிறார். 6, 9க்கு உடைய குரு பகவான் ராசிக்குள் உச்சமாகி, சனி பகவானை 9 ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கக் கூடிய காலமாகும். உங்களுக்கான நல்ல பாதையை வகுத்துக் கொடுப்பார். நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார். வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் கிடைக்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.
சொத்து கிடைக்கும்
தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மூலமாக உதவிகள் கிடைக்கும். நல்ல உயர்கல்வி, நின்றுபோன கல்வி கிடைக்கும் யோகம் உள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் 18 ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். எந்த வேலைகளைச் செய்தாலும் 18க்குப் பிறகு செய்வது நல்ல பலன்களைத் தரும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும்.
கடன் தீரும்
கடன் அடையக் கூடிய காலம். கெட்டவை அனைத்தும் விலகும். 2 ஆம் இடத்தில் கேது இருந்தாலும் சுக்கிரனும் 3 ஆம் இடத்துக்கு நீசமாவதால் 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் சொந்த வீட்டுக்கு வந்து ஆட்சி பலம் பெறுகிறார். சூரியன் ஏற்கனவே நீசமாாக இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். ஆனாலும் விரயம் ஏற்படும். பேச்சு வார்த்தையில் பிரச்சனைகள் வரும். கொடுக்கல் வாங்கல், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
திடீர் அதிர்ஷ்டம்
16 ஆம் தேதிக்குப் பிறகு பண விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாப ஸ்தானதிபதி சுக்கிரன் என்பதால் லாபம் அதிகரிக்கும். வீடு,மனை தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். 5, 10 ஆம் அதிபதியான செவ்வாய் 5 ஆம் வீட்டுக்கு வரப்போகிறார். அங்கு ஆட்சி பலம் பெறுவதால் தெய்வ பலம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டங்கள் பெருகும்.
தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு. உங்களுக்கு தெரியாத விஷயங்களை உங்களுக்கு யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பார்கள். சிலருக்கு தானாகவே தெரியவரும். மன ரீதியாக வலுப்பெறுவீர்கள். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். யோகமான மாதமாக இருக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும். நண்பர்கள், உறவினர்களிடத்தில் சுமூகமாக இருக்கும் அமைப்பு உண்டாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications