வீடு கட்டும் யோகம்... பணம் வருவாய் - மகர சங்கராந்தி பலன்கள்
மகர சங்கராந்தி புருஷன் கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தினால் நற்பலன்கள் கிட்டாது. எருமை வாகனத்தில் வருவதால் மழை அதிகரிக்கும், தீய குணம் கொண்வர்கள் அழிவை சந்திப்பார்கள்.
Recommended Video

சென்னை: சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதைக் குறிக்கிறது. மகர சங்கராந்தி என்பது சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்வதைக் குறிக்கிறது.
தேவர்களுக்குப் பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் 01ம் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தை மாதம் 01ம் நாள் 14-01-2018 ஞாயிற்றுக் கிழமை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம், துருவம் நாம யோகம், வணிசை கரணம் அன்று பகல் 01-46 மணி அளவில் மேஷம் லக்கினம் தனுசு நவாம்சம் உதயமாகும் காலத்தில் சங்கராந்தி பகவான் மகரம் ராசியில் பிரவேசிக்கிறார்.

பலன்கள் என்ன
மகர சங்கராந்தி புருஷன் கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தினால் நற்பலன்கள் கிட்டாது. எருமை வாகனத்தில் வருவதால் மழை அதிகரிக்கும், தீய குணம் கொண்வர்கள் அழிவை சந்திப்பார்கள். கம்பிளி வஸ்திரம் அணிந்திருப்பதால் புது வகையான நோய்கள் தாக்கும்.

ஆரோக்கியம்
முத்து ஆபரணங்கள் அணிந்திருப்பதால் கெட்ட நடவடிக்கை கொண்ட பெண்களுக்கு கெடுதி உண்டாகும். நீர் அபிசேகம் செய்யப்படுவதால் வியாதிகள் பெருகும். சக்கரம் ஆயுதம் கொண்டிருப்பதாலும், நீலோத்பலம் புஷ்பம் அணிந்திருப்பதனாலும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். சிவப்பு குடையும், மாணிக்க விசிறியும் கொண்டிருப்பதால் எந்த நோய்கள் உண்டானாலும் உடல் ஆரோக்கியம் சீராகும்.

விளைச்சல் அதிகமாகும்
மத்தளத்தை வாத்தியமாக கொண்டிருப்பதால் கலைத்துறையினருக்கு தீய பலன்கள் உண்டாகும். தயிர் சாப்பிடுவதால் கால்நடைகளின் அழிவு அதிகமாக இருக்கும். கிழக்கு திசையிலிருந்து வருவதால் கற்றறிந்த மேலோருக்கு பெருமை உண்டாகும். மேஷம் லக்கினத்தில் உதிப்பதால் தானிய உற்பத்தி பெருகும்.

வீடு கட்டும் யோகம்
அசுவினி, பரணி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இடம் மாற்றம் உண்டாகும்.
கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

அரசு உதவி
ஆயில்யம், மகம், பூரம் ஆகிய நட்ச்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தொல்லை உண்டாகும்.
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து பரிசு, பட்டம், அனுகூலம் கிடைக்கும்.

பணம் வருவாய் கிடைக்கும்
கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணம் அதிகமாக செலவாகும். உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications