தாம்பத்யத்திற்கு இந்த பொருத்தம் கட்டாயம் தேவை.. இல்லாட்டி கண்டிப்பா கல்யாணம் பண்ணாதீங்க!
பத்துப்பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணும் போது சில பொருத்தங்கள் அமையாவிட்டால் பரவாயில்லை என்று சொல்வார்கள். ஆனால் யோனிப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமல் கல்யாணம் பண்ணவே பண்ணாதீங்க என்பது ஜோதிடர்
சென்னை: ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ராசிப்பொருத்தம், வசியப்பொருத்தம் என பத்துக்கும் மேற்பட்ட பொருத்தம்
பார்த்து திருமணம் செய்யும் போது சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்வார்கள். ஆனால் யோனிப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் ரொம்ப அவசியமானது. யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே தாம்பத்ய சுகம் சரியாக அமைந்து புத்திரபாக்கியம் பிரச்சனை இல்லாமல் கிடைக்கும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு விலங்கு குறியீடாக உள்ளது. அந்தந்த விலங்குகளின் குணத்திற்கு ஏற்ப தாம்பத்யத்தில் ஈடுபாடு ஏற்படும். யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே உறவில் திருப்தியும் சுகமும் கிடைக்கும். சில மிருகங்களுக்கு சில மிருகங்கள் பகையாக இருக்கும் பகை மிருகங்களுடன் ஜோடி சேர்ந்தால் தாம்பத்யத்தில் தகராறுதான் ஏற்படும். எனவேதான் திருமணம் செய்யும் போது யோனிப்பொருத்தம் ரொம்ப அவசியம் என்கின்றனர்.
அப்படி சரியான பொருத்தம் பார்க்காமல் பார்த்து திருமணம் செய்து வைப்பதனால்தான் முறை தவறிய உறவுகள் ஏற்படுகின்றன. இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. கள்ள உறவுகளும் அதனால் குடும்ப உறவில் சிதைவும் ஏற்படுகிறது.
நட்சத்திரங்களும் விலங்குகளும்
அஸ்வினி - ஆண் குதிரை, பரணி ஆண் யானை, கார்த்திகை பெண் ஆடு, ரோகிணி ஆண் நாகம், மிருகசீரிடம் பெண் சாரை, திருவாதிரை ஆண் நாய்,
புனர்பூசம் பெண் பூனை, பூசம் ஆண் ஆடு, ஆயில்யம் ஆண் பூனை, மகம் ஆண் எலி, பூரம் பெண் எலி, உத்திரம் பெண் எருது, அஸ்தம் பெண் எருமை,
சித்திரை பெண் புலி, சுவாதி ஆண் எருமை, விசாகம் ஆண் புலி, கேட்டை ஆண் மான், மூலம் பெண் நாய், பூராடம் ஆண் குரங்கு, உத்திராடம் கீரி,மலட்டு பசு, திருவோணம் பெண் குரங்கு, அவிட்டம் பெண் சிங்கம், சதயம் பெண் குதிரை, பூரட்டாதி ஆண் சிங்கம், உத்ரட்டாதி பெண் பசு,
ரேவதி பெண் யானை.
யாருடன் யாரை சேர்க்கலாம்
நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். பகை மிருகங்களுடன் சேர்க்க கூடாது அப்படி சேர்த்தால் மட்டுமே கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படாமல் விரிசல் ஏற்படும்.
தாம்பத்யத்தில் திருப்தி
யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் திருப்தியான நிலை ஏற்படும். பகை மிருகங்களை இணைத்தால் வாழ்க்கையே சுவாரஸ்யம் குறைந்து கசப்பாகி விடும். தாம்பத்ய உறவில் திருப்தி ஏற்படாமல் போனால் கள்ள உறவுகளும் சில நேரங்களில் பிரிவும் ஏற்படுகிறது. இன்றைக்கு அதிக அளவில் கள்ள உறவு கொலைகள் ஏற்பட இப்படி பொருத்தமற்ற முறையில் திருமணம் செய்து வைப்பதுதான்.
உடலும் உள்ளமும் பொருந்தவேண்டும்
திருமணப்பொருத்தம் பார்க்கும் போது கணப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் ரொம்ப அவசியம். தம்பதியர் திருமணம் செய்து தாம்பத்ய சுகம் அனுபவித்தால் மட்டும் போதாது. நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் எனபதை இந்த ரஜ்ஜுப்பொருத்தம் தீர்மானிக்கிறது. பெண்கள் தீர்க்கசுமங்கலியாக வாழ இந்த பொருத்தம் அவசியமாகிறது.
சரியான ஜோடி அவசியம்
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். பாம்புக்கும் எலிக்கும் சேர்த்து வைத்தாலோ, புலிக்கும் மானுக்கும் ஜோடி சேர்த்தாலோ எப்படி சேர்ந்து வாழும் எனவேதான் பொருத்தமான துணையோடு சேர்க்க வேண்டும் ஜாடிக்கேற்ற மூடி, பூட்டுக்கு ஏற்ற சாவி அவசியம் தேவை என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.