சனி வக்ர பெயர்ச்சி: கன்னி ராசிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.. மொத்தமா மாறும் வாழ்க்கை
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு அடுத்த 3 மாதங்களில் மிகவும் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழும். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். ஜாதகத்திலேயே சனி வக்ரமாக இருந்தால், இது உங்களுக்கு அருமையான காலம். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.
மாற்றங்கள்
புதிதாக தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. அரசு மற்றும் அரசியலில் இருப்போர் ஏற்றம் காண்பார்கள். அரசுத்துறைகளில் இருப்போருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். அரசியலில் இருப்போருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அரசு தொடர்புடைய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு பணிகளுக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பிரச்சனைகள்
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனத்தில் அதிக கவனம் வேண்டும். உங்கள் தந்தை ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை அவசியம். நாலா பக்கமும் பிரச்சனைகள் சூழலும். எதிர் பாலினத்தினரால் பிரச்னை, பூர்விக சொத்து, சகோதர, சகோதரிகள், திருட்டு என்று பிரச்சனைகள் வரிசை கட்டும்.
கவனம்
சனி வக்ரம் பெரும்பாலும் கெடு பலன்களை தான் கொடுக்கும். ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். மூலம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிரிகள் அதிகம் ஆவார்கள். மன சங்கடங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்
ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். தொழில் கூட்டாளிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். இரண்டாவது குழந்தை விஷயத்தில் கவனம் தேவை. ஜீரணம், அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சனிக்கிழமை ஶ்ரீரங்கம் ரங்கநாதர் வழிபாடு செய்வதால் அருமையான மாற்றங்கள் நிகழும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications