ஏழரை சனியை துரத்தும் சனி ஜெயந்தி.. நாளை இந்த வழிபாட்டை மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சனி ஜெயந்தி 2025: கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்தவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு சனி பகவான் வல்லமை படைத்தவர். வைகாசி அமாவாசையான நாளை சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நன்நாளில் சனி பகவானை வழிபடுவதால் சனி தோசம், ஏழரை சனி தாக்கம் குறையும். இதற்கான வழிபாட்டு முறையை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

கிரகங்களில் சனி பகவான் அமைப்பு மிகவும் முக்கியமானது. சனி பகவான் மட்டும் தான் ஒரு ராசியில் 2.5 வருடங்கள் ஆட்சி செய்வார். புரணாங்கள் படி வைகாசி மாதம் அமாவாசை தினம் சனி பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. அதன்படி வைகாசி அமாவாசையான நாளை (27.5.2025) சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

Shani Jayanthi Shani

சனி ஜெயந்தி

இதனை சனி அமாவசை என்றும் அழைப்பார்கள். இந்த புனித தினத்தில் சனி பகவானை வழிபடுவதால் மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள் விலகும் என்பது நம்பிக்கை. வேத ஜோதிடத்தின் படி நமக்கான கர்ம பலன்களை, அதாவது நல்லது, கெட்டதுகளை வழங்குவதில் சனி பகவானின் பங்கு முக்கியமானதாகும்.

ஏழரை சனி

சனி பகவானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கல்வி, உத்யோகம், தொழில் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள். அதுவே சனி பகவானால் பாதிக்கப்படும் ராசிகளுக்கு உடல் ஆரோக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகளவு பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். அதனால் தான் சனிப்பெயர்ச்சியை உலகமே உற்று கவனிக்கிறது.

பொதுவாக ஏழரை சனிக்கு பயப்படாதவர்க குறைவு. அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசை கட்டி வாட்டி வதைக்கும். ஆனால் அவர்களுக்கு கூட இந்த சனி ஜெயந்தி நல்ல பலன்களை கொடுக்கும். அதனால் சனி ஜெயந்தியில் சனி பகவானை வழிபட்டு, சனி தோசம்,ஏழரை சனியின் நெருக்கடிகளில் இருந்து வெளிவரலாம்.

சனி ஜெயந்தி வழிபடுவது எப்படி

வைகாசி அமாவாசை என்பது மே 26 ஆம் தேதி நண்பகல் 12.11 மணிக்கு தொடங்கி, 27 ஆம் தேதி இரவு 8.31 மணிக்கு நிறைவடையும். இதன் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை சனி ஜெயந்தி கொண்டாப்படும். எனவே நாளை காலை அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டு அருகே உள்ள அரச மரத்தை வழிபட வேண்டும். மரத்தின் வேர் பகுதிக்கு பால், புனித கங்கை நீர், தண்ணீர் மூலம் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு சிறிது நேரம் மரத்தின் அருகில் அமர்ந்து. ஓம்..ஶ்ரீ சனிஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் அடர்ந்து கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இதை எவ்வளவு உச்சரிக்கிறோமோ அவ்வளவு நல்ல பலன்கள் கிடைக்கும்.

சனி ஜெயந்தி தின மாலை அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அந்த விளக்கில் கருப்பு எள் மற்றும் ஒரு ரூபாய் நாணம் வைப்பது அவசியம். இந்த பூஜையின் போது அரச மரத்தை சுற்றி ஏழு முறை வலம் வர வேண்டும். இது சனி தோசம், ஏழரை சனி ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி கிடைக்க பெரியளவுக்கு உதவும்.

இந்த வருடம் பல மங்களகரமான சுப நேரங்கள் சனி ஜெயந்தியில் வருகிறது. அதனால் தடைகள் விலகி நினைத்த காரியங்கள் நிறைவேற, ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி அரச மரத்தை 108 முறை சுற்றி வருவது அருமையான பலன்களையும், அற்புதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

தானம்

சனி ஜெயந்தி தினத்தில் எள், எலுமிச்சை ஊறுகாய், கருப்பு எள், கருப்பு உப்பு, கருப்பு உளுந்து விதை, உளுத்தம் பருப்பு, கருப்பு மிளகு, துணி, கடுகு எண்ணெய் ஆகியவற்றை தானமாக செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+