Rasi Palan This Week: விருச்சிக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. என்ஜாய்
வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் லாபங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பங்குச் சந்தைகளில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பெரிய அளவிலான நம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளுடன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தாய், தந்தை வழி உறவுகளுடன் மேன்மை உண்டாகும்.
முதலீடுகள்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். சுப விரைய பிராப்தம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய பதவி உயர்வுகள் கிடைக்கும். பெரிய முதலீடுகள் ஏற்படும். மேலதிகாரிகள் நம்பிக்கையுடன் உங்களை நம்பி எல்லா பொறுப்புகளையும் கொடுப்பார்கள். நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஆதாயம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் பெறக்கூடியவர்களாக இருப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அடுத்தடுத்து குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் அனுகூலம் காணப்படும். துணைக்கும் உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள், பண வருத்தங்கள் நீங்கும்.
பணவரவு
இடமாற்றங்கள் அனுகூலத்தை தரும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தொழிலில் ஏற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக நிவர்த்தி செய்வீர்கள். வசந்தமான அனுகூலங்கள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஜெயம்
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வரும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும் காலகட்டமாக இருக்கும்












Click it and Unblock the Notifications