இதுதான் இப்போ அவசியம்.. சென்னையில் 1000+ இடங்கள் அப்படியே மாறுது.. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. மோசமான நிலையில் உள்ள சாலைகளை மில்லிங் செய்து அதை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக கண்டறியப்பட்ட 1,000 மோசமான சாலைகளில் 300 வடசென்னையில் உள்ளன.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் கடந்த சில வாரங்களாக மெட்ரோ குடிநீர் பணிகள் நடந்து வந்தன. மெட்ரோ நீர் தருவதற்காக குழாய்கள் சரி செய்யப்பட்டன. இதனால் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.
1,000 மெயின் மற்றும் உட்புற சாலைகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சாலைகள் சீர்திருத்தம்:
பல சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஜெட் பேட்ச் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இயந்திரங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்.
மாற்றப்படும் சாலைகள்:
ராயபுரம், தொண்டியார்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சாலைகளான பர்னபி ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, பேசின் பிரிட்ஜ் ரோடு, அண்ணாநகரின் சாந்தி காலனி ரோடு உள்ளிட்ட சாலைகள் முதல் கட்டமாக சரி செய்யப்படும். இந்த சாலைகளை சரிசெய்வது போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.
எட்டு மாத தாமதத்திற்குப் பிறகு, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) விரைவில் நகரம் முழுவதும் 570 கிமீ நீளமுள்ள 3,505 சாலைகளை புதுப்பிக்க உள்ளது. இந்த பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக பள்ளங்கள் நிறைந்த மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளை மீண்டும் போட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகியவற்றில் சாலை அமைக்கப்பட உள்ளது.
முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications