Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடனே சேனல் தொடங்குங்க.. நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போட்ட ஆர்டர்.. வாகன ஓட்டிகளுக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை கட்டுமானத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காகக் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) மற்றும் நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனங்களும் இனி தங்களுக்குச் சொந்தமான யூடியூப் சேனல்களைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேனல்களில் திட்டங்கள் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்ற வேண்டும் என்று NHAI உத்தரவிட உள்ளது.

இத்திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, நெடுஞ்சாலைத் திட்டங்களின் வீடியோக்களை தங்கள் யூடியூப் சேனலில் பதிவிட வேண்டும் எனச் மத்திய சாலைப் போக்குவரத்துச் செயலாளர் வி. உமாசங்கர் NHAI-க்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை திட்டங்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile NHAI

NHAI வெளியிட்ட திட்டம்

மத்திய நிகழ்வில் பேசிய உமாசங்கர், "தனியார் யூடியூபர்கள் பதிவேற்றும் வீடியோக்களின் மூலம் திட்டங்கள் பற்றிய தகவல்களையும், சவால்களையும் நாங்கள் நிறைய அறிந்திருக்கிறோம். சில கருத்துக்கள் சிக்கல்கள் குறித்த புதிய பார்வைகளையும் வழங்கியுள்ளன. இனி வீடியோக்களைப் பதிவேற்றுவது திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.. இனிமேல் ஒப்பந்த நிறுவனங்கள், மத்திய பிரிவுகளே யூ டியூப் சேனல்களை உருவாக்கி கட்டுமானம் குறித்து அப்டேட் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே கட்டுமானத்தின் போது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களைச் சமர்ப்பிப்பதால், அவற்றை பொது மக்கள் பார்வைக்கு பதிவேற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது பொதுமக்கள் திட்ட முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.

அதே நிகழ்வில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். நெடுஞ்சாலைகளில் QR குறியீடுகளுடன் கூடிய விளம்பரப் பலகைகளை அமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பயணிகள் இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்து, ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகளின் தொடர்புத் தகவல்கள் உட்பட முழு விவரங்களையும் அறியலாம்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

கட்கரி மேலும் கூறுகையில், "ஒரு சாலை மோசமாக இருக்கும்போதும், மக்கள் அதைப் பற்றி சமூக ஊடகங்களில் புகார் தெரிவிக்கும்போதும், அதை அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாலை அமைப்பதில் ஆரம்பம் முதல் இறுதி வரை, நமக்கு முழு பொறுப்பு, நேர்மை மற்றும் நேர்மறையான அணுகுமுறை தேவை. சாலைகள் தரமானதாகவும், நல்ல நிலையிலும் இருக்க வேண்டும். பொறுப்பானவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் குறிக்கும் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

அதேபோல் அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளை தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை குறைபாடுகளை, அதாவது பள்ளங்கள் மற்றும் விரிசல்களை கண்டறிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. 23 மாநிலங்களில் 20,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளைப் பயன்படுத்த NHAI திட்டமிட்டுள்ளது.

அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்பு

இந்த வாகனங்களில் 3D லேசர் அடிப்படையிலான அமைப்பு, குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் பொருட்களின் முடுக்கம் மற்றும் கோண வேகத்தை அளவிடும் மின்னணு சாதனங்கள் போன்ற மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்படும். பயணிகளுக்குச் சிறந்த சாலை அனுபவத்தை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று NHAI தெரிவித்துள்ளது.

சேகரிக்கப்படும் தரவுகள், சாலைகளைப் பராமரித்தல், சொத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க உதவும். இதன் மூலம் சாலைகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் பராமரிப்புத் தேவைகள் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கும்.

சேகரிக்கப்பட்ட தரவுகள் NHAI-ன் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான 'டேட்டா லேக்' போர்ட்டலில் பதிவேற்றப்படும். அங்கு, NHAI-ன் நிபுணர் குழுவால் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, பயனுள்ள தகவல்களாக மாற்றப்படும்," என்று NHAI கூறியது. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தரவுகள் எதிர்கால தொழில்நுட்ப நோக்கங்களுக்காகச் சாலை சொத்து மேலாண்மை அமைப்பில் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+