Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்லியடித்த டாடா.. முடிவுக்கு வந்த மாருதியின் 40 ஆண்டு கால ஆதிக்கம்.. சபாஷ்! சரியான போட்டிதான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கார் சந்தையில் போட்டியும் அதிகரித்துவிட்டது. இதற்கிடையே கடந்த 40 ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் வசம் இருந்த சாதனையை இப்போது முதல்முறையாக டாடா தட்டி தூக்கியுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் ஒரு மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் என்ன தான் ஏகப்பட்ட கார் நிறுவனங்கள் இருந்தாலும் மாருதி நிறுவனத்திற்கு இருக்கும் செல்வாக்கே தனி. நிச்சயம் நீங்களோ அல்லது உங்களைச் சுற்றி பலர் மாருதி காரை வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு மாருதியின் செல்வாக்கு இருந்தது.

automobile tata maruti suzuki

அப்படி டாப் இடத்தில் இருந்த மாருதியை அசால்டாக தட்டி தூக்கியிருக்கிறது டாடா.. 40 ஆண்டுகள் இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மாருதி இப்போது மிகப் பெரிய சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

டாடா மோட்டர்ஸ்:

இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் இல்லாத பொருட்களே இல்லை என்று நாம் சொல்லலாம்.. உப்பு முதல் விமானம் வரை எல்லாமே டாடா குழுமத்தின் வசம் இருக்கிறது. அப்படி ஆட்மொபைல் துறையில் டாடாவின் நிறுவனமாக இருப்பது தான் டாடா மோட்டர்ஸ்.. டாடா மோட்டார்ஸின் முதல் கார் டாடா சியரா.. இது 1991இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இருப்பினும் டாடா என்றாலே உள்நாட்டுத் தயாரிப்பிற்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அப்படி முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் காரா 1998ம் ஆண்டு இண்டிகா அறிமுகப்படுத்தப்பட்டது. அது தாறுமாறான ஹிட் அடித்தது. இதனால் ஆட்டொமொபைல் சந்தையை டாடா மொத்தமாகப் புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஏமாற்றமே மிஞ்சியது. டாடா மோட்டர்ஸ் அடுத்து வெளியிட்ட எந்தவொரு காரும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

automobile tata maruti suzuki

டாடா பஞ்ச்:

இதனால் சுமார் 20 ஆண்டுகளாகவே திணறி வந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காத டாடா குழுமம் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தது. பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2019ல் டாடா குழுமம் டாடா ஹாரியர் என்ற மிட் ரேஞ்ச் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த காருக்கு பிறகே டாடா மோட்டர்ஸுக்கு நல்ல காலம் பிறந்தது என சொல்லலாம்.

ஆனால், இதை விட பெரிய வெற்றி என்பது 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் மூலம் கிடைத்தது. சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது முதலே டாடா பஞ்ச் கார் தாறுமாறான ஹிட் சப்-காம்பாக்ட் எஸ்யுவி காரான பஞ்ச், வெளியாகும் போதே பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்கடிரிக் கார் என மூன்று வெர்ஷனில் வெளியானது. இந்தியச் சாலைகளுக்கு மிக ஏற்றதாகவும் பயணிகளுக்குச் சவுகரியமாகவும் இருந்ததால் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது

automobile tata maruti suzuki

புதிய சாதனை:

இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை டாடா பஞ்ச் தனது வசமாக்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த சாதனை மாருதி சுசுகி வசம் இருந்த நிலையில், அதை டாடா தட்டி தூக்கியிருக்கிறது. கடந்தாண்டு மட்டும் சுமார் 2.02 லட்சம் டாடா பஞ்ச் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடலை தயாரிப்பவர் என்ற சாதனை டாடா வசம் சென்றுள்ளது.

அடுத்து 2 முதல் 4 இடங்களை மாருதி தன்வசமே வைத்திருக்கிறது. 1.91 லட்சம் யூனிட் விற்பனையுடன் மாருதி வேகன்ஆர் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், சுஸுகி எர்டிகா (1.90 லட்சம் யூனிட்கள்), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (1.88 லட்சம் யூனிட்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா (1.86 லட்சம் யூனிட்கள்) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள்.

1985 முதல் 2004 வரை- மாருதி சுசுகி 800
2005 முதல் 2017 வரை - மாருதி சுசுகி ஆல்டோ
2018- மாருதி சுஸுகி டிசையர்
2019- மாருதி சுஸுகி ஆல்டோ
2020- மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
2021, 2022- மாருதி சுஸுகி வேகன்ஆர்
2023- மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

automobile tata maruti suzuki

சபாஷ் சரியான போட்டி

இப்படி 40 ஆண்டுகளாக ஆட்டொமொபைல் சந்தையில் மாருதி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இப்போது டாடா பஞ்ச் அதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. டாடா பஞ்சின் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 6.13 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதேபோல டாடா பஞ்சின் சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ. 7.22 லட்சத்தில் இருந்தும் டாடா பஞ்சின் இவி வேரியண்ட் விலை ரூ. 9.99 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது. இவை அனைத்தும் ex-showroom விலையாகும். வரி மாநிலத்தை பொறுத்து மாறுபடும்.

டாடா பஞ்ச் இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. இது இந்திய ஆட்டமொபைல் சந்தை மெல்ல மிகப் பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது. ஆட்டொமொபைல் துறையின் எதிர்காலமாகக் கருதப்படும் மின்சார கார் சந்தையில் டாடா ஏற்கனவே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்ட நிலையில் வரும் காலத்தில் போட்டி மேலும் கடுமையாகும் என்றே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+