Jana Nayagan: ஜனநாயகனுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது.. கை கொடுத்த தலைப்பு! அப்போ சிவகார்த்திகேயன் நிலைமை?
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜன நாயகன்'. அரசியல் மற்றும் சமூக பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுவதால், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஹிந்தி மொழி தலைப்பு அறிவிப்பு
இந்த நிலையில், வட இந்திய மாநிலங்களில் ஹிந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியாகும் ஜன நாயகன் திரைப்படத்திற்கு 'ஜன் நேத்தா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டிசம்பர் 24 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தலைப்பு, பொதுமக்கள் மற்றும் அரசியல் கருத்துகளை மையமாகக் கொண்ட படத்தின் உள்ளடக்கத்துக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் வட இந்திய சந்தையிலும் விஜய்யின் ரசிகர் வட்டம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர பட்டாளம்
'ஜன நாயகன்' படத்தில் விஜய்யுடன், பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மற்றும் மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாபி தியோலின் வில்லன் கதாபாத்திரம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இசை வெளியீட்டு விழாவிற்கு ஏற்பட்ட கட்டுப்பாடுகள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால், 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விழா டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
ஆனால், சமீப காலமாக விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சில பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
படத்தை சுற்றியுள்ள சிக்கல்கள்
'ஜன நாயகன்' படம் அரசியல் சார்ந்த கதைக்களம் கொண்டதாக இருப்பதால், வெளியீட்டுக்கு முன்பே சில தரப்புகளில் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக வசனங்கள், காட்சிகள் தொடர்பாக சென்சார் குழுவின் கவனத்திற்கு சில அம்சங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
மக்களின் எதிர்பார்ப்பு
விஜய் அரசியலில் முழுமையாக இறங்க உள்ள நிலையில், அவரது கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' ரசிகர்களிடையே மிகப்பெரிய உணர்ச்சிப் பூர்வமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. "ஒரு நடிகராக விஜய் சொல்கின்ற கடைசி அரசியல் கருத்து இதுவாக இருக்குமா?" என்ற கேள்வியும் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்படுகிறது.
Vijay Jana Nayagan:
தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளதால், இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு தியேட்டர் குறைவாக இருந்த நிலையில், இப்போது தியேட்டரும் அதிகரிப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
ஹிந்தியில் 'ஜன் நேத்தா' என்ற பெயரில் வெளியாகும் 'ஜன நாயகன்', விஜய்யின் திரைப்பயணத்திற்கு ஒரு முக்கியமான நிறைவு அத்தியாயமாக அமையுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழா, படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுக்கு முந்தைய அப்டேட்கள் அனைத்தும் அடுத்த சில நாட்களில் மேலும் பேசுபொருளாக மாறும் என்பது உறுதி.
கடைசி நேரத்தில் ஜனநாயகனுக்கு தியேட்டர் அதிகரித்து கொண்டிருப்பதால் இந்த படத்துடன் போட்டி போடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தியேட்டர் கிடைக்குமா? வசூல் அதிகரிக்குமா? என்று எதிர்பார்ப்பும் கேள்விகளும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications