Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தனை சோதனையா ஒரு மனிதனுக்கு? நான் விடமாட்டேன்! டி ராஜேந்தர் ஆதங்கம்.. பிரபலம் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நாட்களுக்கு முன்னிட்டு சென்னை கமலா தியேட்டரில் நடந்த ஒரு சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நடிகை ராஜேந்தர் தியேட்டர் வாசலில் நின்று ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அப்போது சற்றும் எதிர்பார்க்காத செயலை கூல் சுரேஷ் செய்து இருக்கிறார்.

T Rajendar Cool Suresh Tamil Cinema

பன்முக திறமையாளர்

திரையுலகில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றிய டி.ராஜேந்தர், ஒரே மனிதராக முழு படத்தையும் உருவாக்கும் திறமையால் "ஒன் மேன் ஆர்மி" என்ற பெயரைப் பெற்றவர். எதுகை மோனை கலந்த டயலாக், மேடையில் பேசும்போது வரும் அதிரடி, காதலை கூட போராட்ட செண்டிமெண்ட் உடன் சொல்லும் தனித்துவம் - இவை எல்லாம் சேர்ந்து அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தின. அவருடைய பேச்சு சாதாரண ஸ்பீச் ஆக இருக்காது; அது எப்போதும் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

டி ராஜேந்தர் படம்

காதலர் தின ஸ்பெஷலுக்காக அவருடைய உயிர் உளளவரை உஷா படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது அந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்களுடன் தியேட்டருக்கு வந்த அவர், ரசிகர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தனது சினிமா பயணத்தையும், சமீபத்திய திரையுலக சூழலையும் குறித்து திறந்த மனதுடன் பேசினார்.

டி ராஜேந்தர் ஆதங்கம்

"நான் ஒன் மேன் ஆர்மி. இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய 38 நாட்கள் கஷ்டப்பட்டு டிஜிட்டல் வேலை செய்தேன். ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் வேலை பார்த்தேன். குவாலிட்டியில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

அதேபோல் ஒரே நாளில் பல படங்கள் வெளியாகியிருந்ததை குறித்து பேசும் போது, "நான் இந்த தேதியை முடிவு செய்த பிறகுதான் இத்தனை படங்கள் வந்தது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும். என் மகன் சிலம்பரசன் படம் வரும் போது நான் என் படத்தை வெளியிட மாட்டேன். அது என் கண்ணை நானே குத்துவது மாதிரி" என்று தெரிவித்தார்.

திரையுலகில் நடைபெறும் போட்டி குறித்து பேசும் போது, "நான் உயிருள்ள வரை உஷா படம் வெளியிடும் போது இவ்வளவு அம்புகள் என்மேல் வருகிறதென்றால், இன்னும் என்னுடைய வெயிட் இருக்கிறது என்பதற்கான சான்று அது. திரையுலகில் இவ்வளவு அரசியல் நடக்கிறதா? நான் இப்படி அல்லல்படுகிறேன் என்றால் மற்றவர்களின் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

காதல் படம்

மேலும் இளம் தலைமுறையை நோக்கி, "உண்மையான காதல் கஷ்டமாக இருக்கலாம். ஆனா உயிரோட்டமான காதல் எப்போதும் ஜெயிக்கும். இந்த தலைமுறை இந்த படத்தை பார்த்து வாழ்க்கையில் உஷாராக இருக்கணும்" என்றார். தற்போதைய இளைஞர்களின் ரசனை என்ன என்பதை இந்த ரீ-ரிலீஸ் முடிவு தீர்மானிக்கும் என்றும், அதன் பிறகே தனது மற்ற படங்களை வெளியிடுவது குறித்து முடிவு செய்வேன் என்றும் கூறினார்.

"இந்த காலத்து காதல் எப்படி இருக்குன்னு ஒரு புதிய படம் எடுக்க போறேன். என்னை தூண்டிட்டாங்க" என்ற அவரது வரி கவனத்தை ஈர்த்தது. இந்த நேரத்தில்தான் பின்னால் நின்று கொண்டிருந்த நடிகர் கூல் சுரேஷ் திடீரென ஆவேசமாக, "என் தலைவனை சீண்டி பாக்குறீங்களா?" என்று குரல் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோபப்பட்ட டி ராஜேந்தர்

ஆனால் உடனே டி.ராஜேந்தர் அவரை சமாதானப்படுத்தியதால் சூழ்நிலை சுமூகமானது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. TR பேசும் போது அவருக்காக இவ்வாறு செண்டிமெண்டாக அதிர்ச்சி கொடுத்த கூல் சுரேஷின் செயல், ரசிகர்களிடையே பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+