மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி
சென்னை: நடிகர் விஜய்குடும்ப வாழ்க்கை தொடர்பான விவகாரம் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நடிகை திரிஷா மற்றும் விஜய் தொடர்பான ஒரு சம்பவமும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய்யும் திரிஷாவும் ஒரே நிறத்திலான உடை அணிந்து ஒன்றாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறியது.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விஜய் தற்போது அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டத்தில் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விவகாரம் பேசப்படுவது சரியல்ல என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

பார்த்திபன் கூறிய சர்ச்சையான கருத்து
இந்த சூழ்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் R. Parthiban கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து கூறிய கருத்து மேலும் சர்ச்சையை உருவாக்கியது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பலரது புகைப்படங்களை காட்டி அவர்களைக் குறித்து ஏதாவது சொல்லுமாறு கேட்டனர். அப்போது திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது அவர், "குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. அவங்க வெளியே வந்தால் பிரச்னைகள் வருகின்றன" என்று கூறியிருந்தார்.
திரிஷா பொன்னியின் செல்வன் Ponniyin Selvan திரைப்படத்தில் "குந்தவை" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அந்த குறிப்பை பயன்படுத்தி பார்த்திபன் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.
திரிஷாவின் கடும் பதில்
இதற்கு நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடுமையாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: "ஒருவருடைய உதவியாளர் மூலமாக அந்த நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஏதாவது ஒரு கருத்தை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. சில நேரங்களில் அது முட்டாள்தனமாகவும் மாறிவிடும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களின் குணநலனை காட்டாது. அதை பேசுபவரின் குணநலனையே காட்டும்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
திரிஷாவின் இந்த பதிவுக்குப் பிறகு பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ஒரு வாய்ஸ் ரெக்கார்டு வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது: "எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நடந்து விடுகின்றன. அந்த நிகழ்ச்சியில் வேகமாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அப்போது திரிஷாவின் புகைப்படத்தை காட்டினார்கள். என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது 'குந்தவை குந்த வை' என்று அரங்கில் இருந்தவர்கள் குரல் எழுப்பினார்கள். உடனே வார்த்தை விளையாட்டாக 'குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் பிரச்சனை வராமல் இருக்கும்' என்று சொன்னேன்.
அதை கேட்ட அரங்கமே கை தட்டியது. அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். ஆனால் நான் பேசியது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
மீண்டும் விளக்கம் அளித்த புதிய வீடியோ
இதற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பலரும் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர். சிலர் பார்த்திபன் வருத்தம் தெரிவிக்கவே கூடாது என்று கூட கருத்து பதிவிட்டனர். இதையடுத்து பார்த்திபன் மீண்டும் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசினார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: "ஒரு நிகழ்ச்சியில் நான் விஜய், அஜித் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென திரிஷாவின் புகைப்படத்தை காட்டினார்கள். அதை பார்த்ததும் என்ன பேசுவது என்று எனக்கு தெரியாமல் திகைத்துவிட்டேன். நான் திட்டமிட்டு அவர் புகைப்படத்தை போட்டு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று சொல்வது பொய். அப்படி நான் பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன். தவறும் செய்ய மாட்டேன்.
திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என்று அந்தணன் உள்ளிட்டோர் சொன்னார்கள். கரூர் பிரச்சனையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பு வர காரணமான பெண்மணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது என் மனதில் இருந்த ஆதங்கம். ஆனால் அதை சொல்லுவதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை.
அவருடைய புகைப்படத்தை போட்டு பேச வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. 'இவங்க வீட்டிலேயே இருந்திருக்கலாம்' என்று நான் சொன்னது என் ஆதங்கம் தான். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்" என்று கூறினார்.
பிரச்சனைகளை விரும்பாதவன்
மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: "நான் எப்போதும் பிரச்சனைகளை விரும்பாதவன். அந்த வீடியோவை நீக்க சொல்லியும் இருந்தேன். ஆனால் அது வேறு வழியில் வெளியேறிவிட்டது. நான் ஒரு மூன்றாவது நபரைப் பற்றித்தான் பேசினேன். ஆனால் அதை பெண்களுக்கு எதிராக பேசினேன் என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நான் வருத்தம் தெரிவித்தது மிகவும் உண்மையாகத்தான். ஆனால் அந்த பதிவு வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.
மூன்றாம் தரமான பதிவு
ஒரு மூன்றாவது நபரின் மூன்றாம் தரமான பதிவால்தான் நான் இதை மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரைப் பற்றி பொதுவெளியில் ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் பதில் சொல்கிறார்.
நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என்று என்னிடம் கேட்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள்" என்று பார்த்திபன் கூறினார்.
மேலும் இதற்கு பிறகும் தேவையானால் இன்னொரு வீடியோ வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் திரிஷா - பார்த்திபன் இடையேயான இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
-
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க -
‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்! -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி!














Click it and Unblock the Notifications