Fact Check: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவி வரும் போலி செய்தி! உண்மை என்ன?
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி விழுந்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி விழுந்ததாக குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. உண்மையில், கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்தாரா? இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது? என்பது குறித்துப் பார்க்கலாம்.

பரவி வரும் வீடியோ: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், பரப்புரை செய்த போது, கூவத்தூரில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை காண்பித்தார்.
மேலும், இதுபோன்ற புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி காட்டினால் நான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்று சவால் விடுத்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் காலில் விழுவது போன்ற காட்சிகளை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்தாரா?: அப்படியான ஒரு வீடியோவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்திரா காந்தி காலில் விழுவதாக ஒரு காட்சியும் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு வீடியோவில் பேசும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், தனது செல்போனில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலில் விழுந்து கருணாநிதி வணங்குகிறார் என்று ஒரு வீடியோவை காட்டிப் பேசியுள்ளார்.

கோவை சத்யன் அதில், கருணாநிதி இந்திரா காந்திக்கு மாலை அணிவித்து, அவரது காலில் விழுந்ததாக சொல்கிறார். ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்ததில், அந்த வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி அல்ல. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மையார் எனத் தெரியவருகிறது.
உண்மை என்ன?: கருணாநிதி காலில் விழுவது போன்ற அந்த வீடியோ DMK4TN என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சென்னை அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவில், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் காலில் விழுந்து தலைவர் கலைஞர் ஆசி பெற்றார். அந்த வீடியோவை திரித்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில், திமுக தலைவர் கருணாநிதியால் சென்னை தேனாம்பேட்டையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, திமுக தலைவர் கருணாநிதி அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் காலில் விழுந்து ஆசி பெற்றபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, அதாவது, 1984ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி மறைந்தார். அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் ராணி அம்மையார் கருணாநிதியுடன் பங்கேற்ற புகைப்படங்களும் உள்ளன. ராணி அம்மையார் காலில் கருணாநிதி ஆசி பெறும் காட்சியை குறிப்பிட்டுத் தான் இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுவதாக அதிமுக நிர்வாகி பேசியதும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருவதும் தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
முடிவு
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர் அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் காலில் கருணாநிதி விழுந்த வீடியோ காட்சி, இந்திரா காந்தி காலில் விழுந்ததாக திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.
ரேட்டிங்
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications