Fact Check: கோவை நகை பட்டறையில் துப்பாக்கி முனையில் கொள்ளையா? பரவும் தவறான தகவல்
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கோவை சொக்கம்புதூரில் நகை பட்டறையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது என்றும் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்.

அதேபோல பாஜகவும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில், கோவையில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில், துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக சோஷியல் மீடியாக்களில் வீடியோ வேகமாக பரவியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை விமர்சித்திருந்தனர். இப்படி இருக்கையில் இது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இந்த கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கடந்த 28ம் தேதி இங்குள்ள விஷ்ணு மந்திர் சவுக் எனும் பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியில் பெரும்பாலான நகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். ஆனால், கடைகளை ஒட்டியுள்ள நகை பட்டறைகளில் வேலைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடக்கும்.
இப்படி இருக்கையில் முகமுடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை வடமாநிலத்தை சேர்ந்த ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டிருந்தன. இதைத்தான் தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
கோவையில் நகை பட்டறையில் கொள்ளை நடந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகியுள்ளது.
முடிவு
கொள்ளை நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
ரேட்டிங்
-
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications