Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சமடையும் இந்தியா-கனடா மோதல்! ராஷ்டிரபதி பவனில் சீக்கிய காவலர்கள் நீக்கம் என பரவும் போலி செய்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய நிலையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து சீக்கிய பாதுகாவலர்கள் நீக்கப்படுவதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. கனடாவில் இருக்கும் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

 Fact check: Fake news is spreading about Sikh Security Personnel Removed From Rashtrapati Bhavan

இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. கனடாவின் இந்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.

பரவும் தகவல்: இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் டிரெண்டாகி வருகிறது. அதாவது காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் பாதுகாப்புப் பணியில் இருந்து சீக்கியர்கள் நீக்கப்படுவதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் அந்த பதிவில், "டெல்லியில் சீக்கிய வீரர்கள் வலுக்கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசு ஈடுபட்டதாக ட்ரூடோ சொன்ன பிறகு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ராணுவத்திலும் சீக்கிய சமூகத்தினருக்கான விடுப்பு மறுக்கப்படுவதாக தகவல்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன: இதுபோல மேலும் சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவை இப்போது டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் இதை உண்மை என்றும் கருதத் தொடங்கிவிட்டனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தத் தகவல் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது உண்மை தானா என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

 Fact check: Fake news is spreading about Sikh Security Personnel Removed From Rashtrapati Bhavan

ராஷ்டிரபதி பவனில் உள்ள சீக்கிய காவலர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டதாக எந்தவொரு செய்திக்குறிப்பையும் பாதுகாப்புத் துறை அமைச்சகமோ அல்லது மத்திய அரசோ வெளியிடவில்லை. எந்தவொரு ஆங்கில அல்லது இந்தி ஊடகங்களும் இப்படியொரு சம்பவம் நடந்ததாக எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. மேலும், ட்விட்டரில் இது தொடர்பாக நாம் தேடிய போது இந்திய ராணுவம் இது குறித்த அளித்த விளக்கத்தைப் பார்க்க முடிந்தது.

மறுப்பு: இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை மறுத்துள்ளது. அந்த போலி தகவலைப் பகிர்ந்த இந்திய ராணுவம், "இதுபோன்ற பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுபோன்ற போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் பேக்ட் செக் பிரிவான பிஐபி அமைப்பும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டரில், "Claim: சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஷ்டிரபதி பவனில் இருந்த சீக்கிய காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.. ராணுவத்திலும் சீக்கிய வீரர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. இப்படியொரு பொய்யான தகவல் இணையத்தில் பரவுகிறது. இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு தகவல்" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் சீக்கிய காவலர்கள் மாற்றப்படுவது பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை குறித்த ட்ரூடோவின் பேச்சுக்குப் பிறகு, டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள சீக்கிய காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

முடிவு

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று ராணுவம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+