Fact check: "க்ளீன் நோட் பாலிசி.." ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதினால் அவை செல்லாதா.. உண்மை என்ன!
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால் செல்லாது என்ற தகவல் பரவி வருகிறது.
டெல்லி: இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது செல்லாது என்ற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த முறை பலரும் அதை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்த விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016இல் பணமதிப்பு நீக்கம் சமயத்தில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.
இதனிடையே இந்த புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து இணையத்தில் அவ்வப்போது பொய்யான செய்திகள் பரவி வருகிறது. இதற்கு அரசும் தொடர்ந்து விளக்கத்தைக் கொடுத்து வருகிறது.

ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச கரன்சியாக உள்ளது. சில்லறை கிடைப்பதில்லை உள்ளிட்ட பல காரணங்களால் 2000 ரூபாய் நோட்டுகள் பெரியளவில் பயன் தருவதில்லை. ஏற்கனவே, அவை ஏடிஎம்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன. மேலும், ரிசர்வ் வங்கியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டன. இருப்பினும், அவை தொடர்ந்து புழக்கத்திலேயே உள்ளன.

பரவும் தகவல்
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் எதையாவது எழுதுவது என்பது பரவலாக இருக்கும் நடைமுறைகளில் ஒன்று. வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை கட்டாக வைக்கும் போது, அதில் எத்தனை ரூபாய் உள்ளது என்பதை மேலே இருக்கும் நோட்டுகளில் எழுதி வைப்பார்கள். அதேபோல இளைஞர்கள் ரூபாய் நோட்டுகளில் தங்களைப் பெயர்களை எல்லாம் எழுதிய காலங்களும் உள்ளன. இப்போது இந்த நடைமுறை வெகுவாக குறைந்துவிட்டது என்ற போதிலும், ஆங்காங்கே ரூபாய் நோட்டுகளில் இதுபோல எதையாவது எழுதியிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

விளக்கம்
ஆனால், இப்படி புதிய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அது அந்த ரூபாய் நோட்டுகளைச் செல்லாத ஒன்றா மாற்றிவிடுமா.. சமீபகாலமாகவே கரன்சி நோட்டில் ஏதாவது எழுதப்பட்டால் அது செல்லாது என்று இணையத்தில் தொடர்ச்சியாகப் பல செய்திகள் உலா வருகிறது. அதாவது எந்தவொரு ரூபாய் நோட்டுகளிலும் எதாவது எழுதப்பட்டு இருந்தால் அது செல்லாது என்றும் எனவே, பணத்தை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இணையத்தில் போலி செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையே இதற்கு மத்திய அரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது.

நோட்டுகள் செல்லும்
இது குறித்து மத்திய அரசின் பிஐபி தனது ட்விட்டரில், "ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது அவற்றை செல்லாத ஒன்றாக மாற்றுவதில்லை.. அவை தொடர்ந்து சட்டப்பூர்வ கரன்சியாக இருக்கும். அதேநேரம் க்ளீன் நோட் பாலிசி படி, மக்கள் ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அது ரூபாய் நோட்டுகளைப் பாதிக்கும். அதன் ஆயுளைக் குறைக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. சரி அதென்ன நோட் பாலிசி என்று கேட்கிறீர்களா.. வாங்க அதையும் பார்க்கலாம்.

க்ளீன் நோட் பாலிசி
ரிசர்வ் வங்கி கடந்த 1999இல் இந்த க்ளீன் நோட் பாலிசியை அறிவித்தது. அதன்படி ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் விநியோகத்தை அதிகரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், கரன்சி நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்ற அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களின்படி, வாடிக்கையாளராக இல்லை என்றாலும் கூட அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளுக்கு ஈடாக தரமான நோட்டுகள் மற்றும் நாணயங்களை வழங்க வேண்டும் என்பதே க்ளீன் நோட் பாலியாகும்.

ரிசர்வ் வங்கி
கடந்த 2016இல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே.. எழுதப்பட்ட கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. இதற்கு ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் சட்டப்பூர்வமானவை என்றும், வங்கிகளும் பொதுமக்களும் அவற்றை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து விளக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது செல்லாது என்று தகவல் பரவி வருகிறது.
முடிவு
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதியிருந்தாலும் அது செல்லும் எனப் பல முறை ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
ரேட்டிங்
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications