Fact check: 'பான் கார்டு அப்டேட்' வங்கிக் கணக்கு காலாவதியாகிடும் என மெசேஜ்? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கிக் கணக்கு எண்ணுடன் பான்கார்டு விவரங்களை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்று எஸ்.பி.ஐ வங்கி பெயரில் வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கும் மெசேஜ் வந்தது. ஆனால், இதுபோன்ற எந்த மெசேஜையும் எஸ்.பி.ஐ வங்கி அனுப்பவில்லை என்றும் அது போலியானது என மத்திய அரசின் பிஐபி ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையவழி வங்கி பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது.

மக்கள் பெரும்பாலும் வங்கிகளுக்கு நேரடியாக செல்வது இல்லை. செக் டெபாசிட் மற்றும் வங்கி சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் போன்றவை இருந்தால் மட்டுமே வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது.

செல்போனுக்கு லிங்க்கை அனுப்பி

செல்போனுக்கு லிங்க்கை அனுப்பி

இணைய வழி பண பரிமாற்றங்கள் அதிகரித்து விட்டதால் தற்போது சைபர்கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. செல்போனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி போனை ஹேக் செய்து நமது வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக்கொண்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவது, பான் கார்டு, ஆதார் கார்டு அப்டேட் என்ற பெயரில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அதன்மூலம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுவது என புதுப்புது வழிகளில் இந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய கூறி

பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய கூறி

தொலைபேசி வாயிலாக அழைத்து ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்று ஓடிபி எண்ணையும் வாங்கி நடைபெறும் மோசடிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களை பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்ற தகவலுடன் மெசேஜ் ஒன்று அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறியிருந்தனர்.

பேக்ட் செக்-இல் விளக்கம்

பேக்ட் செக்-இல் விளக்கம்

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் இதேபோன்ற மெசேஜ் வந்திருப்பதாக ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து இருந்தனர். அந்த மெசேஜுடன் பான்கார்டு அப்டேட் செய்வதற்கான இணைப்பு என ஒரு யூஆர்எல்-ம் பகிரப்பட்டு இருந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், போலியான தகவல்களை கண்டறிந்து வெளியிடும் மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக் இணையதளத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மெசேஜ் வாயிலாக கொடுக்கவில்லை

மெசேஜ் வாயிலாக கொடுக்கவில்லை

எஸ்.பி.ஐ வங்கி பெயரில் வெளியாகும் இத்தகைய மெசேஜ் முற்றிலும் போலியானது என்று பிஐபி ட்விட்டரில் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று மெசேஜ் வாயிலாக எந்த ஒரு கோரிக்கையையும் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களை பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்ற தகவலுடன் மெசேஜ் ஒன்று அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பரவியது

முடிவு

எஸ்.பி.ஐ வங்கி பெயரில் அனுப்பப்படும் இந்த மெசேஜ் முற்றிலும் போலியானது. பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று எஸ்.பிஐ, மெசேஜ்/ இமெயில் வாயிலாக எந்த ஒரு கோரிக்கையையும் தனது வாடிக்கையாளர்களுக்கு

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+