கொரோனா நோயாளிகளை கண்காணிக்க ஆரோக்யாசேது ஆப்? அப்பட்டமான பொய் செய்தியாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா நோயாளிகளை கண்காணிப்பதற்கு ஆரோக்யாசேது என்கிற ஆப்பை மத்திய அரசு பயன்படுத்துவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் நடமாட்டங்களை கண்காணித்து எச்சரிக்கை விடுப்பதற்கு ஆரோக்யா சேது என்கிற என்கிற செயலியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதன் மூலம் கண்காணிப்பில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்போருக்கும் அது எச்சரிக்கை விடுக்கும்.

Fake: Govt is not using ArogyaSetu app for surveillance

குறிப்பாக கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டோரைத்தான் இந்த செயலி கண்காணித்து எச்சரிக்கை செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கண்காணிப்பு செயலி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

வாட்ஸ் அப் குரூப்புகளிலும் சாட் குரூப்புகளிலும் இச்செயலி குறித்து விவாதிக்கப்பட்டது. செய்திகளிலும் இது தொடர்பாக கட்டுரைகள் வெளியாகியும் இருந்தன. ஆனால் இப்படியான ஒரு செயலியை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மீதான அபாண்டமான குற்றச்சாட்டு இது என்றும் இந்த செயலி லொக்கேஷன் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்படவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் எண்கள் இந்த ஆப்பில் இணைக்கப்பட்டிருக்கும்; அது அரசு ஆவணங்களுக்கானது எனவும் விளக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+