நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடியா.. வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்.. உண்மை என்ன?
டெல்லி: நாடு முழுவதும் வீட்டு மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வாட்ஸ்அப்பில் வரும் தகவலில் உண்மையில்லை.
மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதால் பல மாநிலங்கள் தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாடஸ் அப்பில் திட்டமிட்டு பொய்கள் பரப்பப்படுகின்றன. அந்த வாட்ஸ் அப் செய்தியில். பிஜ்லி பில் மாஃபி யோஜனா (பில் தள்ளுபடி திட்டம்) என்ற பெயரில் செப்டம்பர் 1 முதல் நாட்டின் அனைத்து வீடுகளின் மின்சார கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்தியில் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன: இது முற்றிலும் தவறான தகவல் . எந்த ஒரு மாநில அரசாங்கமும் அத்தகைய எந்த நடவடிக்கைக்கு திட்டமிடவில்லை. மின்சார கட்டணங்களை தள்ளுபடி செய்வது குறித்து மகாராஷ்டிரா அரசு மட்டும் பரிசீலித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டின் மின் நுகர்வு அடிப்படையில் தள்ளுபடியை மூன்று அடுக்குகளாகப் பிரிப்பது குறித்து அரசு யோசித்து வந்தது. இந்த மாதங்களுக்கான பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்பாடு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் பயன்பாட்டிற்கு 100 யூனிட்டுகள் அதிகமாக இருந்தால் அது அந்த கூடுதல் செலவை அரசு ஏற்கும் என்று கூறப்பட்டது.
101-300 யூனிட்களுக்கு 75 சதவீத அதிகப்படியான தொகையையும் 50 சதவீதம் 500 யூனிட்டுகளையும் தள்ளுபடி செய்ய முன்மொழியப்பட்டது.. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பலருக்கும் மின்கட்டணம் உயர்ந்ததாக புகார் எழுந்ததால் திட்டம் முன்மொழியப்பட்டது . ஆனால் இந்த முன்மொழிவை ஏற்க மகாராஷ்டிரா நிதியமைச்சகம் நிராகரித்துவிட்டது. இதனால் அங்கும் மின்கட்டணம் தள்ளுபடி இல்லை என்பது இப்போது உறுதியாகி உள்ளது.
மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு பல மாநிலங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. உயர்ந்துள்ள மின் கட்டணம் குறித்து பலர் புகார் தெரிவித்துள்ளனர். மின் கட்டணத்தை தள்ளுபடி செய்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்று கோரிக்கைகள் வருகிறது.
ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாட்ஸ் அப்பில் தகவல்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் ஊடகமான பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடி
முடிவு
மத்திய, மாநில அரசுகள் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது தொடர்பாக அறிவிப்பு இல்லை.
ரேட்டிங்
-
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications