மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ள நிலையில், இது போல ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கக் கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. ஆனால் இதை 50 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கூறுகையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை.
அதுபற்றி விவாதிக்கப்படவும் இல்லை.

மோசமான ஒரு பாதிப்பை உலகம் சந்தித்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், சில விஷமிகள் இவ்வாறு வதந்திகளை பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே ஊழியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தியது. மிகவும் அத்தியாவசியமாக தேவைப் படும் பணியாளர்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும் என்று நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். மார்ச் 31ஆம் தேதி அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications