குரூப் 2 தேர்வில் முறைகேடா? அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள்! உண்மை என்ன? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில், விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
5,000 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த விடைத்தாள் நகல்களை தேவைப்படுபவர்கள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதன்படி விடைத்தாள்களின் நகல்களை தேர்வர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்தனர். அப்போது தேர்வர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.
அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பொறுத்தவரை மெயின் தேர்வு விடைத்தாள்களை இரண்டு முறை திருத்தப்படுவது வழக்கம். இதில் முதலில் திருத்திய மதிப்பீட்டாளாருக்கும், இரண்டாவது திருத்திய மதிப்பீட்டாளருக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இது டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு தேர்வருக்கு 19 ஆம் எண் கேள்விக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், இரண்டாவது மதிப்பீட்டாளர் அரை மதிப்பெண்கள் மட்டுமே வழங்கியிருக்கிறார். ஒருத்தர் இரண்டு பேருக்கு இல்லை, மொத்தம் 350க்கும் மேற்பட்டோருக்கு இப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்று வருவதாக வெளியாகும் தகவலை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- 2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
விரிந்துரைக்கும் வகை தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்களில் உள்ள ஒவ்வொரு வினாவின் விடையும் பல்வேறு மதிப்பீட்டாளர்களால் (multiple examiners), மதிப்பீடு செய்யப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளை (examiner bias), குறைப்பதற்காக, ஒரு தேர்வரின் ஒவ்வொரு வினாவிற்கான விடையும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் சராசரியே, தேர்வரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15% சதவீதத்திற்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின், தேர்வாணையம் அந்த தேர்வரின் அனைத்து வினாக்களின் விடைகளையும் மூன்றாவது முறை மதிப்பீடு செய்கிறது.
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு -|| (தொகுதி II மற்றும் IIA பணிகள்) -இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper), விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை. தவறான தகவலை பரப்பாதீர் !" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு II-ல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது
முடிவு
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு ||-இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper), விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை.
ரேட்டிங்
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications