பஸ்பம் ஆகும் ரூ.13,66,63,12,00,00,000! உலகத்திற்கே காத்திருக்கும் ஆபத்து! எக்ஸ்பர்ட் தந்த வார்னிங்
சென்னை: அமெரிக்க மார்க்கெட்டில் நாம் எதிர்பார்க்காத மிகப்பெரிய சரிவு ஏற்பட போகிறது.. 1.6 டிரில்லியன் அளவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.. இது உலக மார்க்கெட்டையும் பாதிக்கும் என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
2008ல் ஹவுசிங் லோன் மற்றும் ரியல் எஸ்டேட் சரிவு ஏற்பட்டது. அது உலக அளவில் பின்னர் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது கல்விக்கடன் காரணமாக மத்திய வங்கி கடுமையான சரிவை சந்திக்கும். 1.6 ட்ரில்லியன் அளவிற்கு சரிவை சந்திக்கும். இது அமெரிக்க மார்க்கெட்டை மட்டுமன்றி சர்வதேச மார்க்கெட்டையும் முடக்கும்.

1.6 ட்ரில்லியன் அளவிற்கு உள்ள கல்விக்கடன் அமெரிக்கா மத்திய வங்கிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா மட்டுமன்றி உலகில் உள்ள எல்லா பங்கு சந்தைகளும் கடுமையாக முடக்கம் அடையும். இந்த சரிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. லேசாக நடக்கும் இந்த சரிவு இனி விஸ்வரூபம் அடையும். 2012ல் நான் விடுத்த எச்சரிக்கை இது. இந்த சரிவு உலக மார்க்கெட்டிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். இதனால் சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
இதன் இந்திய மதிப்பு 13,66,63,12,00,00,000 ரூபாய் ஆகும். அதாவது 13 கோடியே கோடி ரூபாய் ஆகும்.
கடுமையான வீழ்ச்சி வரப்போகிறது
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து இருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம் என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications