அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் ராணுவ மோதல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சர்வதேச பொருளாதார சந்தைகளில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்களிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உலக சந்தைகளில் தங்கம் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததை விட வலுவாக இருந்தது.

Gold Price Oil Middle East

இதனால், அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதன் தாக்கமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, அதன் விலை சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்சுக்கு 4,321 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் தங்கம் விலையில் சுமார் 3 சதவீத சரிவு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளி விலையில் லேசான மீட்பு காணப்பட்டது. அதேபோல் பிளாட்டினம் மற்றும் பலாடியம் போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்களின் விலைகளும் சிறிய அளவில் உயர்ந்தன.

கச்சா எண்ணெய் விலை

மறுபுறம், கச்சா எண்ணெய் சந்தையில் முற்றிலும் மாறுபட்ட சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், புதிய தாக்குதல்கள் உலக சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை

குறிப்பாக உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி குறையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டாலரை தாண்டியுள்ளது. அதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் 95 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 டாலருக்கும் அதிகமாக விலை உயர்ந்திருப்பது சந்தைகளின் பதற்றத்தை வெளிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் இறக்குமதி

கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும். குறிப்பாக இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது கூடுதல் சுமையாக மாறும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் உயரக்கூடும். அதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

டாலர் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக இருந்ததால், டாலர் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில் உள்ளது. டாலர் வலுவடைவது தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீடுகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்கள் டாலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளன. யூரோ மதிப்பு இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதேபோல் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பும் சரிந்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம்

மத்திய கிழக்கு பதற்றம், அமெரிக்க வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு, டாலரின் வலிமை ஆகிய மூன்று முக்கிய காரணிகள் தற்போது உலக பொருளாதார சந்தைகளை தீர்மானித்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வும், தங்கம் விலை சரிவும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவது உலக முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மத்திய கிழக்கு சூழல் எவ்வாறு மாறுகிறது என்பதே உலக வர்த்தகத்தை தீர்மானிக்கும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+