சுகர் சர்னு இறங்கிடும்.. வெறும் வயிற்றில் தினமும் வேப்பிலை சாப்பிடலாமா.. நடக்கும் அதிசயத்தை பாருங்க
சென்னை: வேப்பிலைகளின் மருத்துவ குணங்கள் என்னென்ன? தினமும் வேப்பிலைகளை சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தை பொறுத்தவரை, எப்போதுமே வேப்பிலைகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தனை சத்துக்களும் வேப்பிலையில் உள்ளன.

சர்க்கரை நோயாளி: சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலைகள் அருமருந்து என்றே சொல்லலாம்.. ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு, நன்றாக கொதிக்க விட்டு, தண்ணீர் பாதியாக வரும்வரை சுண்டவிட வேண்டும். பிறகு, இலைகளை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு, இதில் அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்குமாம்.
வேப்பிலையின் சாறு, மிகச்சிறந்த கிருமி நாசின.. ரத்தத்தை பூரணமாக சுத்திகரிக்கக்கூடியது.. அதுமட்டுமல்ல, ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப்பொருட்கள், கிருமிகளை வேப்பிலைகள் அழிக்கின்றன.. ரத்த அடர்த்தியை குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான ரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக்கொள்ளவும் இந்த இலைகள் பயன்படுகின்றன.
கெட்ட கொழுப்பு: கெட்ட கொழுப்பை உடலிலிருந்து அகற்ற கூடியது.. அதுபோலவே வயிற்றில் பூச்சிகள் இருந்தால், வேப்பங்கொழுந்தை அரைத்து சிறு உருண்டையாக உருட்டி வெறும் வயிற்றில் விழுங்கினால் போதும். குடல்பூச்சிகள் அத்தனையும் வெளியேறிவிடும். வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால், 10 வேப்பிலைகளை விழுதாக அரைத்து, மோரில் கலந்து குடித்தால் உடனடியாக கட்டுக்குள் வரும்.
அதேபோல சளி தொல்லை அதிகமாக இருந்தால், 5, 6 வேப்பிலையை 3 டம்ளர் தண்ணீரில் போட்டுசுண்ட காய்த்து, சிறிது ஆறவைத்து வெதுவெதுப்பாக குடித்தாலே போதும்.. மெல்ல மெல்ல நிவாரணம் கிடைக்கும்.
உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமானால் வேப்பிலைகளை தவிர்க்க முடியாது. தினமும் 4 வேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
உடலில் ஏதாவது தொற்றுக்கள் இருந்தால், அவை வெளியேறிவிடும்.. அலர்ஜிகளையும் இந்த வேப்பிலைகள் நீக்கிவிடும்.. அனீமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வேப்பிலைகள் வரப்பிரசாதமாகும்..
காயங்கள்: தினமும் 4 வேப்பிலைகளை மென்று தின்றுவந்தால், ரத்த சோகையிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியும் தடைபடும்... அதேபோல, சுவாசம் தொடர்பான கோளாறுகளும் விலகும். அம்மை நோய் புண்களின் தீவிரம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுவிடும். சொறி, சிரங்கு, புண்கள், காயங்கள் உடலிலிருந்தாலும், விரைவான நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications