ஆண்மை குறைபாட்டை நீக்கும் தக்காளி? இத்தனை நாளா தெரியாம போச்சே! கீரையுடன் சேர்க்கவே கூடாது!
சென்னை: தக்காளி பழம் ஆண்மை குறைபாட்டை நீக்கி, பாலியல் ரீதியான பிரச்சினைகளை சரி செய்கிறது தெரியுமா?
திருமணம் பந்தத்தில் இணையும் ஆண்களில் சிலருக்கு ஆண்மை குறைபாடு இருக்கும். இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல், தாம்பத்யத்தில் சிக்கல் ஏற்படும். இதனால் கணவர், மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து மருந்து வாங்கித் தருவதைவிட இயற்கையாக கிடைக்கும் பொருட்களின் மூலம் பலனை பெறலாமே!

அந்த வகையில் தக்காளிக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உள்ளதாம். இதில் லைகோபீன் எனும் பொருள் உள்ளது. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகும். இது ஆண்களில் ப்ரோஸ்டேட் எனும் ஆண்மை சுரப்பியின் ஆரோக்கியத்தை அதிகரித்து பாலுணர்வை தூண்டிவிடுகிறது.
தக்காளியில் தையமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏராளமான விட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. துத்தநாகம், பாஸ்பரஸ், குரோமியம், கோலின் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த தக்காளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
புரோஸ்டேட் புற்றுநோய், குடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும். தக்காளியை சமைத்தால் அதில் லைகோபீன் அதிகரிக்கிறது. இந்த தக்காளி நமது நரம்புகளை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. ரத்தம் உறைதலுக்கு தேவையான விட்டமின் கே இந்த தக்காளியில் உள்ளது.
சருமத்திற்கு நல்லது. முகத்தை பளபளவென வைத்துக் கொள்ள முடியும். தக்காளியில் எண்ணற்ற விட்டமின்கள் இருப்பதால் அவற்றை ஜூஸாக எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயை குறைக்கும். தக்காளியில் உள்ள குமரிக் அமிலம், க்ளோரோஜெனிக் அமிலங்கள் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.
இதயத்திற்கு நன்மையை தருகிறது. ரத்த அழுத்த பிரச்சினையை சரி செய்கிறது. இப்படி பல நன்மைகளை கொடுத்தாலும் தக்காளியை அளவுக்கு மிஞ்சி சாப்பிடக் கூடாது என்கிறார்கள். இதை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் தோல் அலர்ஜியை ஏற்படுத்தும் இருமல், தும்மல், தொண்டை கமறல் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.
தக்காளியை அதிகமாக உணவில் சேர்த்தால் சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படும். அது போல் எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடக் கூடாது. அது போல் தக்காளியால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும். அதிலும் கீரையுடன் தக்காளியை சேர்க்கவே கூடாது என்கிறார்கள். புளிப்புக்கு கீரையுடன் தக்காளியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications