Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லீரல் நோயை விரட்டும் தேங்காய் பூ.. கேன்சரை நெருங்க விடாமல் தடுக்கும் தேங்காய் முட்டையின் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் முட்டை என்றால் என்ன? இதனை எப்படி தயாரிக்கலாம் தெரியுமா? தேங்காய் பூக்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தேங்காய் பூவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? இவைகள் அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தேங்காயை பொறுத்தவரை, கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள் போன்றவை நிரம்பியிருக்கின்றன.

coconut flower liver disease

தேங்காயிலுள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்துதான், ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன.. முதுமையை தள்ளி போட்டு சருமத்தையும் காக்கின்றன. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் தடுக்கின்றன.

தேங்காய் சத்துக்கள்: தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை என்பதால், கொழுப்புகள் உடலில் தேங்குவதில்லை.. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கூட்டும் சக்தி இந்த தேங்காய்களுக்கு உண்டு.

அதேபோல, தேங்காயைவிட தேங்காய்ப்பூவில் இன்னும் ஏராளமான சத்துக்கள் இருக்கிறதாம்.. காப்பர், இரும்புச்சத்து, தாமிரம் போன்றவை இந்த தேங்காய் பூவில் உள்ளன.

தேங்காய் முட்டை: தேங்காய் தண்ணீரே, தேங்காய் பூக்களாக மாறுகின்றன. இதை நாமும் தயாரிக்கலாம். ஒரு சாக்குப்பையில் சிறிது மண் போட்டு, சிறிது தண்ணீரையும் ஊற்றி அதற்குள் தேங்காய்களை காற்று படாதவாறு, 3 மாதங்களுக்கு வைத்துவிட வேண்டும். அதுவரை அதை திறக்கக்கூடாது.. பிறகு, 2 துண்டாக பிரித்து பார்த்தால் தேங்காயின் உள்ளே முழுவதும் தேங்காய் முட்டையாக அதாவது தேங்காய் பூக்களாக பூத்திருக்கும்.. மண்ணில் புதைந்து கிடக்கும் காலத்தில் தென்னையின் அனைத்து சத்துக்களையும் இந்த பூ உறிஞ்சிவிடுகிறது..

இந்த தேங்காய்பூக்கள், ரத்தத்தின் சிவப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தேங்காய்பூக்களை சாப்பிட்டால், பால் அதிகமாக சுரக்குமாம்.. அத்துடன், கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறிவிடும்.

நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க இந்த தேங்காய் பூக்கள் உதவுகின்றதாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகவும், ஜீரண சக்தியை பெருக்கவும், தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும், இந்த தேங்காய் பூக்களே மருந்தாகின்றன.

அடிக்கடி தேங்காய் பூக்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லையாம்.. இதனுடைய முக்கியமான தன்மையே, நம்முடைய உடம்பில் உள்ள செல்களை புதுப்பிக்க செய்கிறது.. இதன்காரணமாகவே, புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகின்றன. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அபரிமிதமாக இந்த பூக்களில்தான் உள்ளன.. நீர்ச்சத்துக்கள், உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது... நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது..

சிறுநீரக பாதிப்பு: சிறுநீரக பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள், தேங்காய்பூக்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய்பூக்களை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்களே சேராது என்கிறார்கள். சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது...

தேங்காய் பூவை சாப்பிடுவதால் உடம்பில் சிதைவு ஏற்படாமலும், பிரீரேடிக்கல்ஸை வெளியேற்றுவதற்கும், இளமையை மீட்டு தருவதற்கும் உதவியாக இருக்கும். அதேபோல, கல்லீரல், பிரச்சனைகளையும், நுரையீரல் பிரச்சனைகளையும் இந்த தேங்காய் பூக்கள் தீர்க்கின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+