இதுதான் சூப்பர்.. ஒரே "இலையில்" இத்தனை ஆச்சரியமா? ஆண்களின் ஸ்பெஷல் கீரையை உடனே நோட் பண்ணிக்குங்க
சென்னை: கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவைதான். ஆனாலும் சில கீரைகளை சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்துவதே கிடையாது. அப்படிப்பட்ட கீரைதான் கொடிபசலைக்கீரை.
2 வகையான கொடி பசலைகள் உண்டு.. ஒன்று பச்சை கலரில் இருக்கும், இன்னொன்று சிவப்பு கலரில் இருக்கும்.பார்ப்பதற்கு, உருண்டு,திரண்டு, சிறிய அளவில் பருமனாக இருக்கும். உள்ளுக்குள் உணவாகவும், சருமத்துக்கு மருந்தாகவும் இந்த கீரை பயன்படுகிறது.

2 வகைகள்: ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த கொடி பசலை, தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரக்கூடியது.. இந்த கீரை மட்டுமல்லாமல், இதன் தண்டுகளிலும் சத்துக்கள் நிறைய உள்ளன. இலைகள் + தண்டுகள் இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் ஏ,பி, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.
வழக்கமாக கீரை சாப்பிட்டாலே, ரத்த விருத்திக்கு நன்மை என்றாலும், இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும்போது, ரத்தம் சுத்தமாகும்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கக்கூடியது.. சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பலம் கிடைக்கும்.. குடல்பகுதி சுத்தமாகும்..
உடல் உஷ்ணம்: பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு சற்று அதிகமாகவே உண்டு.. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய கீரை என்பதால், உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி ஏற்படும்.. சிறுநீர் துவாரத்தில் எரிச்சலை தணித்து, சிறுநீர் போக்கை அதிகப்படுத்தக்கூடியது. ஆனால், சளி, கபம் இருக்கும்போது மட்டும், இந்த குளிர்ச்சி கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு இந்த கீரை மிகவும் உகந்தது.. இதனால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்... உடல் சூடு இருந்தால், இதை பாசிப்பயறுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
சரும பலன்: அதேபோல சரும அழகிற்கும் இந்த கொடிபசலை நன்மை தருகிறது.. இந்த கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும்.. உடலில் அரிப்பு, தீப்புண்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள் போன்றவற்றிற்கும், இந்த கீரையின் சாறு உதவுகிறது. வீக்கம், கட்டிகள் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு, இந்த கீரையை வதக்கிக்கட்ட வேண்டும்..
இந்த கீரையின் சாறு எடுத்து குடித்து வந்தால், அல்லது 10 முதல் 20 மி.லி. வரை பூசிவந்தால், ஆணுறுப்பில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறுமாம். உடலில் அலர்ஜி ஏதாவது ஏற்பட்டுவிட்டால், இந்த கீரையை சிறிது நெய் விட்டு கலந்து மசித்து, அந்த இடத்தில் தடவி வந்தால் அலர்ஜி மறைந்துவிடும்.
கீரை சூப்: மற்ற கீரைகளை போலவே, இந்த கீரையையும், சின்ன வெங்காயம் சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால், சூப் போல வைத்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.. இதற்கு காளிஃபிளவரை பொடி பொடியாக நறுக்கி, வெண்ணெயில் லேசாக வதக்க எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த கொடிப் பசலை கீரையையும், பூண்டையும் பொடியாக நறுக்கி, வெண்ணெய்யில் வதக்கி எடுத்து கொண்டு, மொத்தத்தையும் சேர்த்து சூப் போல வைத்து குடிக்கலாம்.. அதேபோல, பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், தோல் நீக்கிய உருளைக்கிழங்கு போன்றவற்றை அரைத்து, கெட்டி தயிரில் கலந்து, இந்த கீரையையும் நறுக்கி சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சம் சாறு கலந்தால் கொடிப்பசலை கீரை பச்சடி ரெடி.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications