Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயை கன்ட்ரோல் செய்யும் காட்டுயாணம்! துருவல் அரிசியின் 5 பயன்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்டுயாணம் அரிசி என்ற ஒன்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பாரம்பரிய அரிசியின் பயன்பாடுகள் மெல்ல மங்கி வந்த நிலையில் தற்போது அதன் பயன்பாடு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளையா இருந்தால் கள்ளம் கபடம் இருக்காது என்பார்கள். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும்.

Do you know Kattuyanam rice benefits?

ஆனால் உணவு என வரும் போது வெள்ளை இருப்பதை உண்டால் போச்சு! மைதா, வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை நாம் அறவோடு ஒழித்தல்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

பொதுவாக பாரம்பரிய அரிசிகள் என்றாலே அது குறிப்பிட்ட ஒரு நிறத்தில்தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது. அது போல் சிறுதானியங்களும் ஒரு நிறத்தில் இருக்கும். அந்த வகையில் மூங்கில் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, தூயமல்லி, காட்டுயாணம், கருப்பு கவுனி அரிசி, வெள்ளை கவுனி அரிசி, குள்ளக்கார் உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.

தற்போது காட்டுயாணம் என்ற அரிசியின் மகத்துவத்தை பார்க்கலாம். இந்த அரிசியை விளைவிக்க 130 நாட்கள் போதுமானது என்கிறார்கள். இது பார்ப்பதற்கு தேங்காய் துருவல் போல் இருப்பதால் துருவல் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிசி பொதுவாக உரிக்கப்படாமல் இருக்கும்.

இல்லாவிட்டால் உமி இருக்கும். அது சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிறப்பு ஆகும். இந்த அரிசியில் புரதம் , நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கும். ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அத்துடன் கொழுப்பையும் கரைத்து குறைக்கிறது. இந்த அரிசியில் நிறைய ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடும் உள்ளது. இதனால் ரத்த சோகையை தடுக்கும்.

காட்டுயாணம் சர்க்கரை நோய்க்கு எதிரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு ஆகும். இந்த அரிசியை சிறு வயது முதலே எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வரவே வராது. ரத்த சிவப்பணுக்களையும் உருவாக்குகிரது. நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.

இந்த காட்டுயாணம் அரிசியில் உள்ள ஆந்தோசயனைன் வயதாவதை தாமதப்படுத்துகிறது. தோல் சுருக்கம், நிறம் போன்றவற்றை தாமதப்படுத்துகிறது. இந்த அரிசியில் மாங்கனீஸ், துத்தநாகம், இரும்பு உள்ளிட்டவை உள்ளதால் எலும்பு உருவாக்கம் எலும்பு உறைதல் ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைரஸ், பாக்டீரியாக்களில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+